search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்த இளம்பெண் சாவு
    X

    விஷம் குடித்த இளம்பெண் சாவு

    • மனவிரக்தி அடைந்த ஷோபா விஷம் குடித்தார்.
    • அது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே முருக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி ஷோபா (வயது 19). இவர்களுக்கு 8 மாதம் முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணத்தினால் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டில் யாரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மனவிரக்தி அடைந்த ஷோபா விஷம் குடித்தார். அருகில் இருந்தவர் சேலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஷோபா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இறப்பு குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×