குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் சாவு

அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த இளம்பெண் சாவு
Published on

விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள தமிழ்பாடியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி. இவரும், குல்லூர் சந்தையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி (27) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ெதரிகிறது. இதன் காரணமாக அலெக்ஸ்பாண்டி அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பாண்டிச்செ ல்வி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைதாகாமல் இருக்க அலெக்ஸ்பாண்டி குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொ டர்ந்து சம்பவத்தன்று அலெக்ஸ்பாண்டி மோட்டார் சைக்கிளில் பாண்டிச்செல்வியை சமரச தீர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். வழியில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டிச்செல்வி நடுரோட்டிலேயே தான் கொண்டு வந்திருந்த ஸ்பிரேயை உடலில் அடித்து க்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அலெக்ஸ்பாண்டியன் மனைவியை காப்பாற்ற முயன்றார். அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி இறந்தார்.

அலெக்ஸ்பாண்டி சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com