search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old man dies of"

    • தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் மாரிமுத்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
    • அப்போது திடீரென அவரை பாம்பு கடித்து விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி, கரிய கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (62). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து அதே பகுதியில் ஒரு தோட்டத்தில் விவசாய கூலி வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் மாரிமுத்து ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரை பாம்பு கடித்து விட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாரிமுத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதா பமாக மாரிமுத்து இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.
    • இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கண்ணகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேமலை (82). இவரது மனைவி பழனியம்மாள். சேமலை மகனுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று சேமலை யும், அவரது மகனும் வீட்டின் காம்பவுண்டுக்குள் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் சிமெண்ட் சீட் செட்டிற்குள் இருந்த பழைய பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.

    இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேமலை அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேமலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×