search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து மூதாட்டி பலி
    X

    பாம்பு கடித்து மூதாட்டி பலி

    • பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்த போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (60).

    சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்ததால் வீட்டின் வெளியே கிடந்த பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்து வைத்தார்.

    அப்போது அதன் இடையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் கண்ணம்மாள் மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×