search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு கடித்து"

    • ராதிகாகுமாரி வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டம், ராம்பூர், பிரயாகை பகுதியை சேர்ந்தவர் ரினாதேவி (39). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    ரினாதேவி ஈரோடு மாவட்டம், ஈங்கூர், குட்டப்பாளையம் பகுதியில் தனது குழந்தைகளுடன் தங்கி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மகள் ராதிகா குமாரி (10) எழுதிங்கள் பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை ராதிகாகுமாரி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது அவரது வலது பாதங்காலில் பாம்பு கடித்து விட்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ராதிகாகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷ பாம்பு கடித்தது.
    • டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பொன்மான்மேய்ந்தநல்லூர்ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 38) கூலிதொழிலாளி இவர் வடக்கு மாங்குடி பகுதியில் வேலி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜாவை விஷ பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்போது முருகேசனை பாம்பு கடித்தது.
    • செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த கள்ளியம்புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). இவர் அங்குள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. ஆனால் அவர் தன்னை பாம்பு கடித்து என்று தெரியாமல் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார். மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள். இது குறித்து அவருடைய வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவருடைய உறவினர்கள் முருகேசனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேந்திரனின் வலது கால் முட்டியில் பின்புறம் கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    தர்மபுரி மாவட்டம் மோனாசி அடுத்த அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (51). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இரு வரும் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். ராஜேந்தி ரன் மற்றும் சாந்தி வெளியூர்க ளுக்கு சென்று தங்கி நெல் நாத்து நடவு வேலையும் செய்து வந்தனர். இதற்காக அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

    இதேபோல் ராஜேந்திரன், சாந்தி மற்றும் அதே ஊரை சேர்ந்த 20 பேர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த கங்காபுரம் அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்ப வருக்கு சொந்தமான விவசாய பூமியில் நெல் நாற்று நடவு வேலை செய்து அங்கேயே தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று இரவு கொளத்துபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரு க்கு சொந்தமான குடோன் முன்புற கார வாசலில் ராஜேந்திரன், சாந்தி உள்பட அனைவரும் படுத்து தூங்கி கொண்டி ருந்தனர்.

    நள்ளி ரவு 1 மணி அளவில் கார வாசலில் படுத்து தூங்கி கொண்டி ருந்த ராஜேந்திரனின் வலது கால் முட்டியில் பின்புறம் கட்டுவிரியன் பாம்பு கடித்துவிட்டது.

    இதனால் வலியால் துடித்த அவரை கார் மூலம் சிகிச்சை க்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு உள்நோ யாளியாக சிகிச்சையாக சிகி ச்சை பெற்று வந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.
    • பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகி ரியை அடுத்த வாழை த்தோட்டம் காரவலசையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 44). கூலித்தொ ழிலாளி. இவரது மனைவி சித்ரா (42). இவர் சம்பவ த்தன்று காரவலசில் உள்ள விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்திற்கு கூலிவே லைக்கு சென்றுள்ளார்.

    அப்போது சித்ரா வேலை பார்த்து கொண்டிருக்கும் போது கரும்புத்தோட்டத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துள்ளது.

    இதனையடுத்து சித்ராவுடன் வேலை செய்துகொண்டிருந்த அவரது சகோதரி ராசாத்தி என்பவர் சித்ராவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோ ட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழை த்து சென்றுள்ளார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த சம்பவம் குறித்து சித்ராவின் கணவர் மாணிக்கம் சிவகிரி போலீ சாரிடம் புகார் அளித்து ள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு ஒன்று கனகராஜை கடித்து விட்டது.
    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவா னிசாகர் ரோடு மாமரத்து தோட்டம் அய்யன் சாலை பகுதியைச் சே ர்ந்தவர் கனகராஜ் (வயது 53). இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கனகராஜ் அவருக்கு சொந்தமான நிலத்தில் சம்பங்கி, வாழை பயிரிட்டுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மாலை அவரது சம்பங்கி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று ள்ளார். அப்போது வர ப்பில் நடந்து சென்ற போது பாம்பு ஒன்று கனகராஜை கடித்து விட்டது. இதை யடுத்து அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவிக்குப் பின்னர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் கனகராஜ் குடும்பத்தினரின் விருப்ப த்தின் பேரில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும், கோவையில் உள்ள தனியார் மருத்து வமனையில் கனகராஜ் சிகி ச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது உடலில் விஷத்தின் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் நேற்று அதிகாலை உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனகராஜ் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து சத்தியமங்கலம் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 38), விவசாயி.

    இவரது மனைவி நித்யா (31). தம்பதியினர் 2 பேரும் நேற்று தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது நிலத்தில் படுத்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு, நித்யாவின் காலில் கடித்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நித்யாவை மீட்டு சிகிச்சை க்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி வீட்டில் இருக்கும்போது திடீரென பாம்பு ஒன்று பழனிச்சாமியின் இடது காலில் கடித்தது.

    இதையடுத்து பழனிச்சாமியின் உறவினர்கள் அவரை மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து பழனிச்சாமியின் மகன் நவீன் (23) மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.
    • பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நசியனூரை அடுத்துள்ள முள்ளம்பட்டி, இச்சிவலசு பகுதியைச் சேர்ந்தவர் நாகதேவி (63). இவரது கணவர் கடந்த 13 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் உமாசங்கர் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    உமா சங்கர் மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். நாகதேவி கடந்த 3 மாதங்களாக திங்களூர் அருகே உள்ள சின்னவீர சங்கிலி, அய்யன்காட்டுத் தோட்டம் பகுதியில் உள்ள கால் நடை மருத்துவர் சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில், வீட்டின் பின்புறம் கீரை பறிக்க சென்ற நாகதேவியை பாம்பு கடித்துவிட்டதாக தெரிகிறது.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியி லேயே நாக தேவி இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று சென்னியம்மாளை கடித்து விட்டது.
    • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கம்பூளியாம்பட்டி பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சென்னியம்மாள் (58). தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.

    சென்னியம்மாள் கால்நடைகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு கால்நடைகளுக்கு புல் எடுப்பதற்காக அருகில் உள்ள காலி இடத்திற்கு சென்று புல்லை எடுத்து கொண்டிருந்தார்.

    அப்போது புல்லில் மறைந்திருந்த பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக சென்னியம்மாளை கடித்து விட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சென்னியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்துள்ள கரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (73). இவர் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. இதையடுத்து அந்தப் பாம்பை அடித்து கொன்று தன்னுடன் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி தனது மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து ஈஸ்வரியை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தூங்கிக்கொண்டிருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சேவை கவுண்டனூர் காசிலிங்க புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி கார்த்திகா குருநாத புரம், வாழை குட்டை தோட்டம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அன்று இரவு மனைவியை பார்க்க மணி தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்று விட்டனர். மணி வீட்டு வாசலில் தரையில் பாயை போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தூங்கிக் கொண்டி ருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதனால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை பார்த்து மனைவி, குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×