பாம்பு கடித்து பெண் சாவு

இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பு கடித்து பெண் சாவு
Published on

ஈரோடு:

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சீரங்காயி (52).

கடந்த 1-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் அதே ஊரை சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பி.கே.வலசு குமரப்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கரும்பு வெட்டும் வேலை பார்த்து வந்தனர்.

இதேபோல் சம்பவத்தன்று சீரங்காயி தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது அவரது இடது குதிகாலில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சீரங்காயி பாம்பு.. பாம்பு.. என்று கத்தினார்.

அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சீரங்காயி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com