search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து விவசாயி பலி
    X

    பாம்பு கடித்து விவசாயி பலி

    • விவசாயி சரவணன் இடது குதிகாலில் ஒரு பாம்பு கடித்தது
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்

    ஈரோடு மாவட்டம் சிவகிரி குமாரவலசு அருகே உள்ள் ஒரு கரும்புத் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன் (வயது 56) என்பவர் தண்ணீர்பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அவரது இடது குதிகாலில் ஒரு பாம்பு கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் கூறியுள்ளார்,

    இதையடுத்து அவர் உறவினரின் காரின் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சரவணனை கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்ட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

    Next Story
    ×