search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teen dies of"

    • பாம்பு ஒன்று அவரது வலது காலை கடித்து விட்டது.
    • மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம், கரூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம். இவரது மனைவி சுரேகா (34). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சுரேகா தனது விவசாய தோட்டத்தில் எள்ளு பயிரை பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வந்த பாம்பு ஒன்று அவரது வலது காலை கடித்து விட்டது.

    இதனால் வேதனையால் துடித்த அவரை நல்லசிவம் மீட்டு கார் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சுரேகா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×