பாம்பு கடித்து பெண் சாவு

அவரது காலில் பாம்பு கடித்தது.சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.
பாம்பு கடித்து பெண் சாவு
Published on

சென்னிமலை:

சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி அம்மன்கோவில் புதூரை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி ருக்மணி (68). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று சென்னிமலையை அடுத்துள்ள நொய்யல் கிராமத்தில் நடக்கும் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோவில் புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதற்காக அவர் வீட்டில் இருந்து சென்றார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்தது.

உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.

இது குறித்து அவரது மகன் தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com