என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து சிறுவன் சாவு
    X

    பாம்பு கடித்து சிறுவன் சாவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
    • நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    பெருந்துறை:

    மேற்குவங்க மாநிலம், பர்கானா மாவட்டம் உதர்பகுண்டி பகுதியை சேர்ந்தவர் முகுல்காசி. இவர் தனது மனைவி பஜீலா காத்தூன், மகன் பர்கன்காசி (வயது 2) ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

    முகுல்காசி பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டில் தனது குழந்தைகளுடன் தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு தனது குழந்தை பாம்பு பாம்பு என்று அலறியது. உடனடியாக முகுல்காசி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் கிடந்த துணிக்குள் பாம்பு இருந்துள்ளது.

    அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவனை பார்கையில் முதுகில் பாம்பு கடித்த காயம் இருந்துள்ளது. உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பர்கன்காசி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×