search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivagangai"

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட காங்கிரசார் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், அருணகிரி, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீவித்யா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், டாக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    முடிவில் நகர தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பரம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஆறுமுகம் (வயது35). எலக்ட்ரீசியனான இவர், சேந்தல்பெரியாணைச் சேர்ந்த போஸ் (43) என்பவருடன் அருகில் உள்ள திருமணவயல் கிராமத்திற்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் மாலையில் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். ஆறுமுகம் முன்னே செல்ல போஸ் பின்தொடர்ந்து சென்றார். திருமணவயல் கண்மாய் அருகே சென்றபோது திடீரென்று போஸ் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஆறுமுகம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த போஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாபிளவர், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 2 தனியார் பஸ்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ளது கருதாவூரணி. இங்கு தனியார் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.

    இன்று மதியம் இங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 தனியார் பஸ்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் 2 ஆம்னி பஸ்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்ம நபர்கள் பஸ்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.
    சிவகங்கை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

    சிவகங்கை நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நகர் பகுதியில் அ.தி.மு.க. நகர பொருளாளர் முஸ்தபா தனக்கு சொந்தமான டீக்கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தன் உள்பட சிலர் கடையை அடைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்தப்பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிவகங்கை நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதே போல் மாவட்டத்தின் பிற பகுதிகளான காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, கல்லல் ஆகிய பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மானாமதுரையில் புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை, சுந்தரபுரம் கடை வீதி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன.#tamilnews
    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ள கோவானூர் பகுதியில் உள்ள உப்பூர் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அதிகாரி புகழேந்திக்கு தகவல் கிடைத்தது.

    அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஆற்றில் மணல் கடத்திக் கொண்டிருந்த ரமேஷ் (வயது 38), கூத்தாண்டன் (34), பாலா (22), ரமேஷ் கண்ணா (39), நாகராஜ் (32) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

    சிவகங்கையில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை கமலா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஏலம்மாள் (வயது 45). இவர், சிவகங்கையில் இருந்து வாடகை காரில் மதுரைக்கு சென்றார்.

    அதற்கான வாடகையை ஏலம்மாள் கொடுக்கவில்லை. இதனால் டிரைவர் கிருஷ்ணன் (33) வந்து கேட்டார். அப்போது ஏலம்மாளுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கிருஷ்ணன் தன்னை தாக்கியதாக சிவகங்கை டவுன் போலீசில் ஏலம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து கார் டிரைவர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காரைக்குடி அருகே உள்ள காளவாய் பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காளியம்மாள் (60), காரைக்குடியைச் சேர்ந்த முத்து (55) என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து முத்து தனது சகோதரி முருகேஸ்வரியுடன் வந்து காளியம்மாளிடம் பணம் கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் தாக்கப்பட்டதாக காரைக்குடி தெற்கு போலீசில் காளியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து சகோதரிகள் முத்து, முருகேசுவரியை கைது செய்தார். #Tamilnews
    சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்திடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் சிறப்பு முகாம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனுடைய நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    எனவே, சிவகங்கை வருவாய் கோட்டத்தினை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    ×