search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car driver arrest"

    பெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற பெண்ணை மானபங்கப்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த கட்டிட கலை வடிவமைப்பாளரான 26 வயது பெண் கடந்த 1-ந் தேதி மும்பை புறப்பட்டார்.

    அதிகாலை 2 மணி அளவில் அவர் வாடகை காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஆனால் திடீரென கார் டிரைவர் மாற்றுப் பாதையில் அழைத்து சென்றார். அப்போது அந்த பெண் இது குறித்து கேட்ட போது மிரட்டினார். அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றார். பின்னர் தனது காரில் வைத்து மானபங்கப்படுத்தினார்.

    அதோடு அந்த பெண்ணின் ஆடையை கட்டாயமாக அவிழ்த்ததும் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார். மேலும் படம் எடுக்க போஸ் கொடுக்குமாறும் கட்டாயப்படுத்தினார்.

    இதுகுறித்து புகார் கொடுத்தால் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து விடுவோம் என்றும் மிரட்டினார்.

    அந்த பெண் மும்பை சென்றடைந்த பிறகு நடந்த சம்பவம் குறித்து பெங்களூர் போலீஸ் கமி‌ஷனருக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பினார். இந்த புகார் மனு ஜே.பி. நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை மானபங்கப்படுத்திய வாடகை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    செல்போனில் படம் எடுப்பதற்காக குற்றவாளி அந்த பெண்ணின் ஆடையை அவிழ்க்குமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த பெண் மறுத்தார். மிரட்டி படம் எடுத்து உள்ளார்.

    இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். #Tamilnews
    சிவகங்கையில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை கமலா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஏலம்மாள் (வயது 45). இவர், சிவகங்கையில் இருந்து வாடகை காரில் மதுரைக்கு சென்றார்.

    அதற்கான வாடகையை ஏலம்மாள் கொடுக்கவில்லை. இதனால் டிரைவர் கிருஷ்ணன் (33) வந்து கேட்டார். அப்போது ஏலம்மாளுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கிருஷ்ணன் தன்னை தாக்கியதாக சிவகங்கை டவுன் போலீசில் ஏலம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து கார் டிரைவர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காரைக்குடி அருகே உள்ள காளவாய் பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காளியம்மாள் (60), காரைக்குடியைச் சேர்ந்த முத்து (55) என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து முத்து தனது சகோதரி முருகேஸ்வரியுடன் வந்து காளியம்மாளிடம் பணம் கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் தாக்கப்பட்டதாக காரைக்குடி தெற்கு போலீசில் காளியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து சகோதரிகள் முத்து, முருகேசுவரியை கைது செய்தார். #Tamilnews
    ×