search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sellur Raju"

    • பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட பாரதிய ஜனதாவைச் சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் ராஜா மாவட்ட பொருளாளர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு தே.மு.தி.க., பி.ஜே.பி.யை சேர்ந்த பலர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கும், அதனை தொடர்ந்து எடப்பாடியாரை தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கும் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

    அண்ணா காலத்திலே சனாதனம் ஒழிக்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் வந்தது. சீர்திருத்த திருமணங்களை அண்ணா செய்து வைத்தார். அதனை தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டது.

    இன்றைக்கு அ.தி.மு.க.வில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் தலைவராக உள்ளார். இதேபோல் தி.மு.க.வி.ல் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களையும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக முடியுமா?

    பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது. நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம். தேவருக்கு தங்க கவசத்தை அம்மா வழங்கினார்.

    கர்நாடகா தேர்தலில் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்குவோம் என கூறினார்கள். தற்போது ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. இதில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு மீதி பேருக்கு வழங்கவில்லை.

    மதுரை எம்ஜிஆர் விளையாட்டு திடலில் விளையாட்டு வீரர்கள் தங்க தங்க விடுதி, ஓய்வு அறை அமைக்க வேண்டும் என்று கூறினோம். இதுவரை எந்த நடவடிக்கை இல்லை. அதே போல் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு திடல் அமைக்கப்படும் என உதயநிதி கூறினார். எனது தொகுதியில் ஜெயஹிந்த்புரத்திலுள்ள இடத்தை தேர்வு செய்து கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    இன்றைக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரையில் 2 நாள் முகாமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை சென்ற பின் தனது தந்தையிடம் சொல்லி மதுரைக்கு சிறப்பு நிதியை ஒதுக்க சொல்வாரா?

    மேலும் உதயநிதி கூட்டத்தில் காலி சேர்கள் இருக்கக்கூடாது என்று ஆயிரம் ரூபாய் கொடுத்து உட்கார வைத்துள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மோடிஜி கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸால் கொண்டு வர முடியவில்லை. பிரதமர் மோடி நன்றாக தமிழ் பேசுகிறார். புதிய அவையில் கூட செங்கோல் வைத்து தமிழகத்தின் புகழை அறியச் செய்துள்ளார்.

    கடந்த 10 வருடம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது எதையும் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு, கச்சதீவு பிரச்சனையை கூட தீர்க்கவில்லை.

    மோடி மீண்டும் பாரதப் பிரதமராக வருவார். தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும். பா.ஜ.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன்.
    • செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன். ஆனால் ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் நான் உலகம் முழுவதும் அரசியல் விஞ்ஞானியாக கலாய்க்கப்பட்டு வருகிறேன். எனது சொந்தக்கதை, சோகக்கதையை இப்போதும் சொல்ல விரும்புகிறேன், நீங்களும் கேளுங்கள்.

    மதுரை மாவட்டத்தில் அப்போது வறட்சி நிலவியதால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி நிவாரண கூட்டம் அப்போதைய கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது.

    அந்த சமயம் சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றில் 15 லட்சம் மக்கள் கூடும் நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் ஆலோசித்தேன்.

    அப்போது வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. எனவே இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கலாம், அதற்குள் மழை வந்துவிடும் பிறகு நிலைமையை சமாளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை.

    இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கலெக்டர் என்னை செல்போனில் அழைத்தார். நாம் வைகை அணைக்கு செல்ல வேண்டும். அங்கே முதன்மை பொறியாளர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். அதன் மூலம் வைகை அணையில் நீரை ஓரளவு சேமிக்கலாம் என்றார்.

    இது தொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை பொறியாளரிடம் விளக்கம் கேட்டேன். அவர்களும் இது சாத்தியமானது தான். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் இதனை பரீட்சார்த்த முறையில் வெற்றிகரமாக செய்துள்ளது என்று தெரிவித்தனர்.

    நானும் கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன். அங்கு சென்றதும் அதிகாரிகள் அணையின் உள் பகுதியில் தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர். அப்போது நானும் அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை வைகை அணை தண்ணீரில் வைத்தேன். வைத்தது தான் தாமதம் அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன.

    இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்தேன். அதற்காக ரஸ்க் ஆகி விட்டேன்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கலகலப்பாக பேசினார்.

    அவரது பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் இதனை கேட்டு சிரித்தனர்.

    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் தே.மு.தி.க.வினர் 150 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    மதுரை

    மதுரை கோரிப்பாளை யத்தில் உள்ள அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தே.மு.தி.க. முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    அவருடன் தே.மு.தி.க. மதுரை முன்னாள் வடக்கு மாவட்ட துணைச்செயலா ளர்கள் சின்னச்சாமி, இளமி நாச்சி யம்மாள், மேரி ராஜேந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் விஜயராஜா, ராஜேந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்அப்து ல்லா, ராஜா, அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர்கள் கவிஞர் மணி கண்டன், ரஹமத் பீவி, பகுதி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா ரூபி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, மாணவரணி துணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பிரகாஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெய பாண்டி, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட 150-க் கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை 30-வது வட்ட செயலாளர் பாம்சி கண்ணன் மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சி குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வந்த ராஜா என்பவரும் வி.பி.ஆர்.செல்வகுமாருடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    • அ.தி.மு.க. மாநாட்டு புளியோதரை விவகாரத்தில் அஷ்டலட்சுமியே நேரில் வந்தாலும் குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. வீர வரலாற்றில் எழுச்சி மாநாடு கடந்த 20-ந் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டு வெற்றிக்காக உழைத்த மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி களுக்கு பாராட்டு விழாவும், சிறப்பு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, பீடா ஆகிய வற்றுடன் இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா கட்டி காத்த இயக்கத்தை இன்றைக்கு நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமையேற்று நடத்தி வருகிறார்.

    மதுரை மண்ணில் முதல் மாநாட்டை நடத்தி தி.மு.க. விற்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிசாமி திகழு கிறார். இந்த ஆட்சி எப்போது முடியும். மு.க.ஸ்டாலின் எப்போது வீட்டுக்கு செல்வார் என்று தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

    விரைவில் தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி யார் பதவி ஏற்பார். அதற் காக நாம் அயராது உழைக்க வேண்டும். இன்றைக்கு 2 கோடி உறுப்பினர்களை கொண்ட மகத்தான இயக்க மாக அ.தி.மு.க. உருவெடுத்து உள்ளது. வருகிற பாராளு மன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெரும் வகை யில் இந்த மதுரை மாநாடு நமக்கு முதல் புள்ளியாக அமைந்திருக்கிறது .

    மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் திரண்டனர். பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆற்றிய வீர உரை தமிழக அரசியலில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியிலும் பெரும் வர வேற்பு பெற்றுள்ளது.

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் முக்கி யத்துவம் பெற்றுள்ளது அந்த அளவுக்கு பல லட்சம் மக்கள் குவிந்து மதுரையில் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரிய எழுச்சி அலையை உரு வாக்கி தந்துள்ளனர்.

    அஷ்டலட்சுமி

    மாநாட்டில் தொண்டர்க ளுக்கு பசியாற உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் சிறப்பாக ஏற்பாடு செய்தார். 300 கவுண்டர்களில் உணவு வழங்கப்பட்ட நிலையில் ஒரு கவுண்டரில் 10 அண்டா புளியோதரை மீதமானதை பெரிதாக பேசுகிறார்கள் குறை சொல்பவர்கள் என்றைக்குமே குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அதை பெரிது படுத்த தேவை யில்லை.

    அஷ்டலட்சுமியே நேரில் வந்து காட்சி அளித்தாலும் மூக்கு சரியில்லை, முடி சரியில்லை என்று குற்றம் கண்டுபிடித்து குறை கூறு பவர்கள் தமிழகத்தில் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறார்கள்.

    எனவே அ.தி.மு.க.வின் வெற்றி மாநாட்டை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் இது போன்ற நயவஞ்சக செயலை நாம் பெரிது படுத்தாமல் அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறும் வகை யில் உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராட்டு கூட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • எழுச்சி மாநாடு அ.தி.மு.க. தொண்டர்கள் குடும்பமாக திரண்டு வர வேண்டும்.
    • செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கழகத்தின் பொது செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடியாரின் தலை மையில் கழகத்தின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரை வளையங் குளம் பகுதியில் நாளை காலை மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கழக கண்மணிகள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கடைகோடி தொண்டர்கள் அனைவரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யாரின் சீரிய தலைமையில் பங்கேற்கிறார்கள்.

    இந்த எழுச்சிமிகு மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். மேலும் மாநாட்டின் காலை முதல் மாலை வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்து மாநாட்டின் இறுதி வரை பங்கேற்கும் வகையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்டுக்கோப்போடு எடப்பாடியாரின் ஆணை யை நிறைவேற்றும் சிப்பாய் களாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
    • இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.

    மதுரை 

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப் படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    தமிழகம் முழுவதும் விலை–வாசி உயர்வை கண் டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை–யில் ஆரப்பாளையம் பெத் தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங் களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்ற கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு கூடியி–ருந்த அ.தி.மு.க. நிர்வாகி–களும், தொண்டர்களும் கோஷங்களை எழுப்பினர்.

    இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண் ணாதுரை, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவ–ணன், மாணிக்கம், ராஜாங் கம், வெற்றிவேல்,நிலையூர் முருகன் கவுன்சிலர்கள் சோலைராஜா, சண்முக–வள்ளி, மாயத்தேவன், ரூபிணி குமார், பைக்காரா கருப்புசாமி, பரவைராஜா, முத்துவேல், கலைச் செல் வம், கே.வி.கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல் லூர் ராஜூ பேசியதா–வது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த நன்மை–யான திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இத–னால் இந்த ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கி–றார்கள்.

    தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார் கள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு மூன் றாவது சக்தியாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள் ளார். அவரால் தி.மு.க. என்ற இயக்கத்தை அழிக்க முடியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பேசும் போது, அமைச்சர்களோ, தி.மு.க.–வினரோ ஏதாவது பிரச் சினையை ஏற்படுத்தி விடு–வார்களோ என்று நினைத் துக்கொண்டு இருக்கிறேன், இதனால் தூக்கம் என்று தவிக்கிறேன் என்றார்.

    ஆனால் இப்போது மத்திய அரசின் அமலாக துறையின் சோதனை அவ–ருக்கு மிகப்பெரிய கலக் கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் வெளியே வடி–வேல் பாணியில் பேசி சமாளிக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மட்டம் வீக்" என்ற வகையில் தி.மு.க. உள்ளது.

    எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும். கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலினின் இந்த அரசை விரைவில் கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தமிழக போலீஸ் மீது மத்திய அமலாக்க துறைக்கு நம் பிக்கை இல்லை. அந்த அள–வுக்கு தமிழக காவல்துறை சீரழிந்து விட்டது. அதனால் தான் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக் கத்துறை தி.மு.க. அமைச் சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.

    இந்த சோதனை இன்னும் தொடரும். 2016-ம் ஆண் டுக்குள் இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து கருணா–நிதி வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்படும். மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி மாபெரும் எழுச்சி மாநாட்டை எடப்பா–டியார் தலைமையில் கூட்டி உள்ளோம்.

    இந்த மாநாட்டில் மது–ரையில் இருந்து 4 லட்சம் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்பார்கள். அ.தி.மு.க.வின் இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    • மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக் கிணங்க மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க கோரி மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்று தமிழக ஆட்சியா ளர்களுக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும் வகையில் திரளாக பங்கேற்க வேண்டுமாறு வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.
    • டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பது கொடுமையானது.

    மதுரை :

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனால்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜனதா கட்சிக்கு தி.மு.க. பல்லக்கு தூக்கி அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. அடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கி முக்கிய துறைகளில் மந்திரி பதவி பெற்றது. அந்த சமயத்தில்தான் 2ஜி மூலம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை தி.மு.க ஊழல் செய்தது.

    பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தேசிய அளவில் கட்சிகளை திரட்டி வருகிறது. எனவே மு.க.ஸ்டாலின்தான் பிரதமர் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே தமிழக மக்கள் அவர்களிடம் சிக்கி உள்ளனர். இது போன்று இந்திய மக்களும் சிக்க வேண்டுமா?.

    அ.தி.மு.க.விற்கு கூட்டணி என்பது துண்டு மாதிரி. ஒரு தேர்தலில் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கிறார்கள். தி.மு.க. கடந்த தேர்தலில் தனித்து இருந்தால், எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக இருந்து இருப்பார். 13 கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது.

    போக்குவரத்து துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கி கிடக்கிறது. அதே போல் ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஊழியர் 3 கடைகளில் பணியாற்றுகின்றனர்.

    நடிகர் விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏழை மக்களுக்கு உணவு அளிப்பது வரவேற்கதக்கது. இதே போல் மற்ற நடிகர்களும் உதவி செய்ய வேண்டும். ரஜினி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரும் மக்களுக்கும் அதிகம் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. போதை மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பது கொடுமையானது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். பள்ளி குழந்தைகளுக்கு தி.மு.க. அரசு சத்து இல்லாத உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை தருகிறார்கள். தினமும் அதையே பள்ளி குழந்தைகள் எப்படி சாப்பிட முடியும். ஆனால் சிறை கைதிகளுக்கு சிக்கன், முட்டை என விதவிதமான உணவு வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தவறு செய்பவர்கள்தான் இந்த ஆட்சியில் நன்றாக வாழ்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிவாரணம் தந்த அரசு அல்லவா இது?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக அ.தி.மு.க. செய்து வருகிறது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான இயக்கம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞராக இருக்கிறார். அவரும் அவரது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் அரசியல் செய்கிறார்.

    அண்ணாமலை

    தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக பணியாற்றினார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுபோல எல். முருகன் பாரதிய ஜனதா தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தினார். இதையடுத்து மத்திய அமைச்சர் பதவி அவருக்கு கிடைத்தது. அதுபோல பதவிக்காக தற்போதைய தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக அ.தி.மு.க. செய்து வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வினரின் ஊழல்களை அவ்வப்போது வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

    அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. நாங்கள் தி.மு.க.வினரின் குறைகளை அமைதியான முறையில் தெரிவித்து வருகிறோம். அ.தி.மு.க. எப்போதும் மக்கள் விரும்பும் இயக்கமாகும். ஆனால் பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும்.சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரதீய ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை

    மதுரையில் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மதுரையில் மாநகராட்சி நிர்வாகம் மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது தற்போது புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் மாநகராட்சியில் துறை ரீதியாக வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேயர் என்பவர் மதிப்பிற்குரியவர். வணக்கத்திற்குரியவர். அவரது பணியில் வேறு யாரும் தலையிட அனுமதிக்க கூடாது. ஆனால் வேறு எந்த மாநகராட்சியிலும் இல்லாத ஒரு நடைமுறை மதுரை மாநகராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேயரை ஆட்டிப்படைக்க ஒரு சூப்பர்மேயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    இதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மேயருக்கு சில விவரங்கள் தெரிய வில்லை என்றால் கவுன்சில் குழு தலைவர் இருக்கிறார் மாநகராட்சி ஆணையாளர் இருக்கிறார். அவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் அதை விட்டுவிட்டு அவரது அதிகாரத்தை இன்னொருவர் பறிக்க கூடாது.

    அ.தி.மு.க. என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும் தமிழகத்தைப் பொருத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான இயக்கம். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞராக இருக்கிறார்.அவரும் அவரது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் அரசியல் செய்கிறார்.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக அ.தி.மு.க. செய்து வருகிறது. அ.தி.மு.க. தலைவர்கள் தி.மு.க. வினரின் ஊழல்களை அவ்வப்போது வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை நாங்கள் தி.மு.க.வினரின் ஊழலை அமைதியான முறையில் தெரிவித்து வருகிறோம். அண்ணாமலை ஸ்பெஷல் டீ போல கூறி வருகிறார். 

    அ.தி.மு.க. எப்போதும் மக்கள் விரும்பும் இயக்கமாகும் ஆனால் பாரதிய ஜனதா நிகழ்ச்சிகளில் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இரை எங்கே  இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்காய்கள் கூடுவது வழக்கம் தான். இரை தீர்ந்த பின் அவை பறந்து விடும்.காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும். சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும்.அதுபோலதான் சில கட்சிகளுக்கு மக்கள் கூட்டம் கூடுகிறது.

    அ.தி.மு.க.வின் கருத்தாக 21 ஆண்டுகள் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தமுறையில் ஒரு கருத்தை தெரிவிக்கிறேன். அ.தி.மு.க. கடந்த 2014, 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு உள்ளது அது போல வருகின்ற தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்று தேர்தலை சந்திக்கட்டும் அதிமுகவும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது இதனை சவாலாகவே கூறுகிறேன்.

    பிரதமர் மோடி சொல்வதைத்தான் செய்வார். செய்வதைத்தான் சொல்வார். ஒரு திறமையான பிரதமரை நாடு பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்து சாதனை படைத்துள்ளார் நரேந்திர மோடி. ஆனால் தமிழக அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. 
    பக்கத்து மாநிலங்களில் கூட வரியை குறைத்து விட்டது ஆனால் திராவிட மாடல் பற்றி பேசும் தி.மு.க. அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுத்து வருகிறது. அதுபோல தேர்தல் வாக்குறுதிகளை எதையுமே என்னும் நிறைவேற்றவில்லை.இதனால் தமிழக மக்கள் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். 

    கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முதலமைச்சர் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளதாக வஞ்சப் புகழ்ச்சியாக கூறியுள்ளார். அவர் இருக்கின்ற கூட்டு றவுத்துறை அவர் விரும்பாத துறையாக இருக்கிறது.

    ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது கூட தொண்டர்களுக்கு இல்லாத உற்சாகம் இப்போது ஏற்பட்டுள்ளது .
    இவ்வாறு அவர் கூறினார்.
    எதிர்கட்சி எம்.எல்.ஏ. வாக இருந்தாலும் மதுரைக்கு திட்டங்களை பெற்று தருவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை

    முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக மக்கள் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகை
    யில் மதுரை மேற்கு தொகுதி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து முதன்மை தொகுதியாக உருவாகிடும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். அதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

    மதுரை காளவாசல் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளன. மாடக்குளம், துவரிமான், கீழமாத்தூர் ஆகிய கண்மாய்களில் தண்ணீர் நிரம்ப வசதியாக கொடி மங்கலத்தில்வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகளையும் மேம்படுத்தி உள்ளேன்.

    மேலும் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் வசிக்கும் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் மதுரையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுகின்ற வகையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,295 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மதுரை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சே இருக்காது. மேலும் சோலை அழகுபுரம் முதல் அம்பேத்கார் நகர் வரை 973 வீடுகளுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டுமனை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 

    மாடக்குளம் முனியாண்டி புரத்தில் உள்ள மக்களுக்கு பாதாள சாக்கடை, தார்சாலை, பேவர் பிளாக், நியாயவிலைக்கடை, அங்கன்வாடி, சத்துணவு கூடம், ஆழ்குழாய்க் கிணறுகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாடக்குளம் அய்யனார் கோயில் அருகில் சமுதாயக் கூடம் கட்டப் பட்டுள்ளது. பரவை ஊர்மெச்சிக்குளத்தில் இருந்த அரசு தொடக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமயநல்லூரிலிருந்து துவரிமான் இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாடு மட்டுமின்றி மதுரை நகரின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடிக்கு மேல் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.சில பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகையாற்றில் நவீன சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 345 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க வசதியாக ஏவி மேம்பாலம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு பனையூர் வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தெப்பகுளம் கடல் போல் காட்சியளிக்கிறது.

    வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும். தற்போது எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
    மதுரை:

    சென்னையில் நடை பெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மதுரை-போடி இடையிலான அகலப்பாதை ரெயில் திட்டத்தை நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற மதுரை போடி ரெயில் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள், ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மதுரை ரெயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

    மதுரை-தேனி ரெயில் கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்ட மக்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது.

    கருணாநிதி

    தற்போது அவருடைய மகன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க கேட்கிறார். நீட் தேர்வு குறித்து முதல்வர் மேடையில் பேசியது விளம்பரம் தேடுவதற்காகவே. ஏனென்றால் தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தான் 2010-ம் ஆண்டு நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது.

    அப்போதைய தி.மு.க. மத்திய அமைச்சர் காந்திசெல்வன் கையெழுத்திட்டார். இப்போது நீட்தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

    எனவே கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக தி.மு.க. அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு காரணமே தி.மு.க. தான்.

    வளர்ந்த மாநிலங்களிடம் இருந்து அதிக வரி வருவாய் பெற்றாலும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டுமென முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போத ஆணித்தனமாக கூறினார்கள்.

    தி.மு.க. ஒரு வருடத்தில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.அவர்கள் அறிவித்த திட்டங்கள் பல தோல்வியடைந்து விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

    ×