search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோடி மீண்டும் பிரதமராக வருவார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
    X

    மோடி மீண்டும் பிரதமராக வருவார்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

    • பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட பாரதிய ஜனதாவைச் சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் ராஜா மாவட்ட பொருளாளர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு தே.மு.தி.க., பி.ஜே.பி.யை சேர்ந்த பலர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கும், அதனை தொடர்ந்து எடப்பாடியாரை தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கும் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

    அண்ணா காலத்திலே சனாதனம் ஒழிக்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் வந்தது. சீர்திருத்த திருமணங்களை அண்ணா செய்து வைத்தார். அதனை தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டது.

    இன்றைக்கு அ.தி.மு.க.வில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் தலைவராக உள்ளார். இதேபோல் தி.மு.க.வி.ல் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களையும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக முடியுமா?

    பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது. நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம். தேவருக்கு தங்க கவசத்தை அம்மா வழங்கினார்.

    கர்நாடகா தேர்தலில் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்குவோம் என கூறினார்கள். தற்போது ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. இதில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு மீதி பேருக்கு வழங்கவில்லை.

    மதுரை எம்ஜிஆர் விளையாட்டு திடலில் விளையாட்டு வீரர்கள் தங்க தங்க விடுதி, ஓய்வு அறை அமைக்க வேண்டும் என்று கூறினோம். இதுவரை எந்த நடவடிக்கை இல்லை. அதே போல் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு திடல் அமைக்கப்படும் என உதயநிதி கூறினார். எனது தொகுதியில் ஜெயஹிந்த்புரத்திலுள்ள இடத்தை தேர்வு செய்து கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    இன்றைக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரையில் 2 நாள் முகாமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை சென்ற பின் தனது தந்தையிடம் சொல்லி மதுரைக்கு சிறப்பு நிதியை ஒதுக்க சொல்வாரா?

    மேலும் உதயநிதி கூட்டத்தில் காலி சேர்கள் இருக்கக்கூடாது என்று ஆயிரம் ரூபாய் கொடுத்து உட்கார வைத்துள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மோடிஜி கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸால் கொண்டு வர முடியவில்லை. பிரதமர் மோடி நன்றாக தமிழ் பேசுகிறார். புதிய அவையில் கூட செங்கோல் வைத்து தமிழகத்தின் புகழை அறியச் செய்துள்ளார்.

    கடந்த 10 வருடம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது எதையும் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு, கச்சதீவு பிரச்சனையை கூட தீர்க்கவில்லை.

    மோடி மீண்டும் பாரதப் பிரதமராக வருவார். தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும். பா.ஜ.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×