என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sanitation workers"
- இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படை க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்பி.எப். உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியா ளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தை தோ ல்வியில் முடிவடைந்தது. தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு செல்லும் வகையில் ஒவ்வொரு நாளும் தூய்மை பணியாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலக ங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர். நேற்று காளை மாட்டு சிலை பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக என்ன போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து இன்று ஈரோடு மாவட்டம் சி.ஐ.டி.யு தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. சின்னசாமி, சி.ஐ.டி.யு. சுப்பிரமணியம், எல்.பி.எப் கோபால் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். முன்னதாக 7-வது நாளாக குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மலை போல் குப்பை தேங்கி உள்ளது.
மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
- காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
பணி நிரந்தரம், குறைந்த பட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராகவன் முன்னிலையில், மாநகராட்சி உதவி ஆணையர் சுதா, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, 5-வது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் 6-வது நாளாக தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக காளை மாட்டு சிலை அருகில் தூய்மை பணியாளர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் சின்னசாமி, மற்றும் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தோழமை சங்கங்களின் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே 6-வது நாளாக தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1,800 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். 500 நிரந்தர தூய்மை பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குப்பைகள் அள்ளும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 257 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது தவிர மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து வந்தனர்.
வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகர் பகுதியில் ஆயிரம் டன் குப்பைகள் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி சென்று ள்ளதால் குப்பைகள் மலை போல் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்சமயம் மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களை வைத்து குப்பைகள் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
- ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும்
- தூய்மைப் பணியாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக இன்று நடை பெறவுள்ள டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ. 725 ஐ ஏப்ரல் முதல் வழங்க வேண்டும்.
மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., உள்ளிட்ட தொழி ற்சங்க ங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டு னர்கள் உள்ளிட்டோர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி நோய் வரவும் அபாயம் ஏற்பட்டு ள்ளது.
ஒவ்வொரு நாளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தூய்மை பணியா ளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 4 -வது நாளாக நீடித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி அலு வலக வளாகத்தில் இன்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மற்றும் தோழமைச் சங்கங்க ளின் நிர்வாகிகள் முன்னி லை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதுகுறித்து, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறுகையில், "தூய்மைப் பணியாளர்கள் 4-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர்.எங்களது தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதன் முடிவைப் பொறுத்து பணியாளர்களின் அடுத்த கட்டப் போராட்டம் முடிவு செய்யப்படும்" என்றார்.
- பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் பணியாற்றி வரும் தற்காலிக துப்புரவு பணியாளர்களில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை பணி நீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், மீண்டும் அவர்களை பணி நியமனம் செய்யக்கோரி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கை விடுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படாததால் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் கூறுகையில்,
கொரோனா காலங்களில் உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம். தற்போது திடீரென ஆட்குறைப்பு என்ற பெயரில் எங்களை வேலைக்கு வர வேண்டாம் என சொன்னால் எங்களின் குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்றனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தூய்மைபணியாளர்கள் ஸ்டிரைக் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் இன்று காலை குப்பைகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தது.
- திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு சிவன் கோவில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
- அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் சரிவர பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சமபள பாக்கியை கண்டித்தும், அதனை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இன்று காலை சுமார் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சிவன் கோவில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாட்ஷா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பளப் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் தூய்மை பணியாளர்களின் சுமார் 2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்
- நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
அவிநாசி :
அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூா் ஊராட்சியில் 18 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் குறைவான ஊதியம் வழங்குவதுடன், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இது குறித்து தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் கூறியதாவது:- தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.120 மட்டுமே தினக் கூலியாக தெக்கலூா் ஊராட்சியில் வழங்கப்பட்டு வருகிறது.அதிலும் மாத ஊதியத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை குறைத்து வழங்குகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமாரிடம் கேட்டபோது, தெக்கலூா் ஊராட்சியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களில் விடுப்பு எடுத்தவா்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறேன். தூய்மைப் பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
- முகாமிற்கு பேரூராட்சிமன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
- முகாமில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
விளாத்திகுளம்:
பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் நடமாடும் மருத்துவமனை மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பேரூராட்சிமன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், மாரீஸ்வரி தாளமாணிக்கம், வேல் ஈஸ்வரி, அன்பில் நாராயணன், சரண்யா ஸ்ரீதர், குறிஞ்சி, பிரியா, ராமலட்சுமி காளியப்பன், வார்டு செயலாளர் ஸ்டாலின், கென்னடி, செவிலியர்கள் அருணா தேவி, ஆனந்தராணி, ரம்யா, விமலா, ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன.
- தினசரி ரூ.340 ஊதியம் வழங்கப்படுகிறது.
உடுமலை :
உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன. மொத்தம் 240 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு தினசரி ரூ 340 ஊதியம் வழங்கப்படுகிறது, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் மாதம் சுமார் ரூபாய் 8000 ஊதியமாக பெறுகின்றனர். இந்நிலையில் புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் 90 பேரை ஆள் குறைப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறி பணியாளர்கள் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி தலைவர் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்கப்படும் .யாரும் நீக்கப்பட மாட்டார்கள். தகுந்த ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.அப்போது நகராட்சி அதிகாரிகள் நாட்ராயன், சிவகுமார், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
- நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
- முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில், சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் முதற்கட்ட மாக தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ. 1,500 ஆகும். மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது. இந்த பணியானது மாநகராட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சுகாதார மையத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
- கடையநல்லூர் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டது.
- நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி மொத்தம் 33 வார்டுகளை கொண்டது. இதில் 17 வார்டுகளில் தனியார் தூய்மை தொழிலாளர்கள் 82 பேர் பணி புரிகிறார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.340 ரூபாய் வீதம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள கூலி உயர்வு, பி.எப். பணம், ஈ.எஸ்.ஐ மருத்துவ காப்பீட்டு அட்டை, சீருடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பி.எப். பணம், ஈ.எஸ்.ஐ மருத்துவ காப்பீட்டு அட்டை, சம்பள உயர்வு கேட்டு கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை சுமார் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. குப்பைகளை அள்ளும் எலக்ட்ரிக் வாகனம் பழுதடைந்தால் தொழி லாளர்களே அதனை சரி செய்ய வேண்டுமென தனியார் நிறுவனம் கூறு வதாக கூறி அதனை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதுகுறித்து நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தனியார் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நிரந்தர துப்புரவு தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடை பெற்று வருவதாக நகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
- ரூ.721 சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
- இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என இவர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் நாள் ஒன்றுக்கு ரூ.721 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் உறுதி அளித்தபடி இதுவரை ரூ.721 சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் அறிவித்தபடி புதிய சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
நேற்று விடிய, விடிய அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நீடித்தது. ஆண், பெண் என ஏராளமான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டது.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகி கவிதா கூறுகையில் கலெக்டர் அளித்த வாக்குறுதியின் படி எங்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.721 வழங்கப்பட வேண்டும். எங்களின் இந்த போராட்டம் காத்திருப்பு போராட்டம் ஆகும். நேற்று காலை போராட்டத்தை தொடங்கினோம். இரவு விடிய, விடிய போராட்டம் நடந்தது. இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. சம்பள பிரச்சினையில் முடிவு தெரியும் வரை இங்கேயே காத்திருப்போம், போராட்டத்தை தொடருவோம் என்றார்.
- ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
- இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்பட 132 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இப்பணியாளா்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை விட குறைவாக நாளொன்று க்கு ரூ.395 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். போராட்டம் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
தொழிலாளர் நல சட்டங்களின் படியான சட்டபூர்வமான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
ஆனால் ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இரவு முழுவதும் கடும் பனியை பொறுப்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் காத்திருப்பு போரா ட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்