search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
    X

    மருத்துவமுகாம் நடந்தபோது எடுத்த படம்.

    விளாத்திகுளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

    • முகாமிற்கு பேரூராட்சிமன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • முகாமில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    விளாத்திகுளம்:

    பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் நடமாடும் மருத்துவமனை மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பேரூராட்சிமன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். மருத்துவர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்தனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    முகாமில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேஷ், மாரீஸ்வரி தாளமாணிக்கம், வேல் ஈஸ்வரி, அன்பில் நாராயணன், சரண்யா ஸ்ரீதர், குறிஞ்சி, பிரியா, ராமலட்சுமி காளியப்பன், வார்டு செயலாளர் ஸ்டாலின், கென்னடி, செவிலியர்கள் அருணா தேவி, ஆனந்தராணி, ரம்யா, விமலா, ஐஸ்வர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×