search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு
    X

    கோவையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு

    • ரூ.721 சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
    • இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என இவர்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் நாள் ஒன்றுக்கு ரூ.721 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் உறுதி அளித்தபடி இதுவரை ரூ.721 சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் அறிவித்தபடி புதிய சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    நேற்று விடிய, விடிய அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நீடித்தது. ஆண், பெண் என ஏராளமான தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகி கவிதா கூறுகையில் கலெக்டர் அளித்த வாக்குறுதியின் படி எங்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.721 வழங்கப்பட வேண்டும். எங்களின் இந்த போராட்டம் காத்திருப்பு போராட்டம் ஆகும். நேற்று காலை போராட்டத்தை தொடங்கினோம். இரவு விடிய, விடிய போராட்டம் நடந்தது. இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. சம்பள பிரச்சினையில் முடிவு தெரியும் வரை இங்கேயே காத்திருப்போம், போராட்டத்தை தொடருவோம் என்றார்.

    Next Story
    ×