search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road works"

    • விஜயாபதி பஞ்சாயத்தில் முடிவடைந்த பணிகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் திறந்து வைத்தார்.
    • ஆவுடையாள்புரத்தில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி பஞ்சாயத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.மேலும் முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார்.விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். மேலும் ஆவுடையாள்புரத்தில் ரூ. 4.80 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும், தோமையார்புறத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் சாலைக்கும், விஜயாபதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி,ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவுடை பாலன், மெளலின், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சகாயராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,மாவட்ட பிரதிநிதி கோவிந்தன்,வேலப்பன்,தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப் பாளர் கேனிஸ்டன், நவ்வலடி சரவண குமார், கஸ்தூரிரெங்கபுரம் பாலன், ராதாபுரம் அரவிந்த்,சிதம்பரபுரம் முருகன், சந்தியாகு, ராஜேஷ், ரீகன், யேசுதாஸ், சிவசுப்ரமணியம், அய்யப்பன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், எழில் ஜோசப், குமார், காமில், சாகுல் ஹமீது, முத்தையா, கோகுல், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
    • புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட பல்வேறு தரப்பினரும் திணறி வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் நகர்புற பகுதியில் தற்போது தான் பழைய தார் சாலைகளை பெயர்த்து அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

    ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சி யம் காட்டி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் ஆலங்குளம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு, தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர்.

    பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் தண்ணீரை பீச்சி அடித்து சாலை அமைக்கவும் வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். 

    • கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஊராட்சி ஒன்றியம் சுந்தரம்பள்ளி கிராமத்தில் பிரதம மந்திரி சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சுந்தரம்பள்ளி முதல் நத்தம் காலனி வரையும், சின்னாரம்பட்டி ஊராட்சி, தோரணபதி முதல் மைக்கா மேடு வரை ரூ.55 லட்சத்திலும், கொரட்டி ஊராட்சி தண்டுக் கானுர், மோழிகடை மங்கலப்பள்ளி வரை ரூ.1 கோடியே 44 லட்சத்திலும், மட்றப்பள்ளி ஊராட்சி, காடவல்லி ஏரி மேற்கத்தியானூர் புதுப்பட்டி வரை ரூ.2 கோடியே 12 லட்சத்திலும், ஜவ்வாது மலையில் மேலூர் யாம சாலை, சின்னவட்டானூர் கிராம சாலை என ரூ.19 கோடியே 33 லட்சம் செலவில் கிராம தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை சி.என்.அண் ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜி ஆகியோர் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்து பேசினர்.

    கந்திலி ஒன்றிய பகுதிகளில் முதல்முறையாக 17 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.19 கோடியே 33 லட்சத்தில் ஒரே நாளில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளில் 5 தொகுப்புகளாக தமிழ்நாடு கிராமப்புற சாலை அபிவிருத்தி துரிப் திட்ட மூலம் (2022-2023) ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 13.745 கி.மீ அளவிலான 133 சாலை பணிகள் செயல்படுத்த திட்டம் தொடக்க விழா திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு 14 வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். அனைவரையும் நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

    133, சாலை பணிகளை பூமி பூஜை போட்டு பணிகளை திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி தொடங்கி வைத்தார்.

    இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் சேர்மன் நகர கழக செயலாளர் எஸ். ராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் அகால் சுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் நகராட்சி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • தொடக்க விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார்.
    • புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம்அருகே மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதன் பணி தொடக்க விழா நடந்தது.

    பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரி வண்ணமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முக ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் திலகர்ராஜ் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு ரூ.12 லட்சம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுப்பட்டி பஞ்சாயத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பட்டியில் இருந்து காமராஜ் நகருக்கு புதிய குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியினையும் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் தொழிலதிபர் மணிகண்டன், புதுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலவிநாயகம், துணைத் தலைவர் வேல் துரை, ஓடைமறிச்சான் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் திராவிட மணி, ஒன்றிய பொருளாளர் சண்முக சுந்தரம், வார்டு உறுப்பினர் சங்கீதா, இயேசுராஜன், சிவலார்குளம் முத்தையா, மருதம்புத்தூர் கிளை செயலாளர் அருணாச்சலம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ஆய்வு மேற்கொண்டு விரைவில் சாலை பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது ஏலகிரி மலையில் பல்வேறு பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை நேற்று ஏலகிரிமலை ஊராட்சியில் ராயனேரி முதல் கீழ்காடு வரையும், அத்தனாவூர் முதல் கோட்டூர், பள்ளக்கணியூர், ஐயம்பாறை வரையும், பாடனூர் முதல் புத்தூர், தாயலூர் வரையும் சாலை அமைக்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் கு.செல்வராசு, வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், துணைத் தலைவர் திருமால், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சங்கர், மணிமேகலை, ராஜ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது
    • கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
    • திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் - பல்லடம் ரோடு தென்னம்பாளையம், டி.எம்.சி., காலனி அருகே ரோட்டின் குறுக்கில் சிறுபாலம் கட்டி மழை நீர், கழிவு நீர் ஆகியன அருகேயுள்ள ஓடைக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

    இச்சூழலில் ரோட்டின் ஒரு புறம் இப்பணிகள் முடிந்து, மறுபுறம் நடந்து வருகிறது.

    தற்போது திருப்பூரை நோக்கி செல்லும் ரோடு முழுவதுமாக இப்பணிக்காக பேரிகார்டு தடுப்பு கொண்டு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து சென்று வருகிறது. மாலை, இரவு நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருப்பூர் - காங்கயம் கிராஸ் ரோட்டிலிருந்து நல்லூர்,விஜயாபுரம் வழியாக இந்த ரோடு அமைந்துள்ளது.இந்த ரோட்டில் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் நகரப்பகுதியில், ஏராளமான பஸ் நிறுத்தம், முக்கிய ரோடு பிரிவுகள், நான்கு முனை ரோடு சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களும் அமைந்துள்ளன.

    இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையாக உள்ள நிலையிலும், அகலமாக அமைந்துள்ளது. இருப்பினும் முக்கிய சாலை சந்திப்பு மற்றும் சிக்னல் பகுதிகளில் இதன் தற்போதைய அகலம் பயன்பாட்டுக்கு ஏற்ற அளவில் இல்லாத நிலை இருந்தது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ரோட்டில் வளைவான பகுதி மற்றும் சிக்னல் அமைந்துள்ள இடங்களில் ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் பள்ளக்காட்டு புதூர்,ராக்கியாபாளையம் பிரிவு, காசிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு அகலப்படுத்தப்படுகிறது.இதற்காக ரோடு அமையும் இடத்தில் தார் ரோடு போடும் வகையில் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதனால், சிக்னல் பகுதிகளில் ப்ரீ லெப்ட் முறையில் வாகனங்கள் கடந்து செல்ல ஏதுவாக அமையும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

    • ராஜபாளையம்-தென்காசி சாலையை செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதனை எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேருசிலை முதல் காந்திசிலை வரை செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதற்கடையே பழைய பஸ்நிலையம் தொடங்கி சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி மெயின் ரோடான தேசிய நெடுஞ்சாலையில் செப்பனிடும் பணி தொடங்கியது. தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் சாலையில் இறங்கி நடந்து சென்று இந்த பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி னார்கள்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், குறிப்பிட்ட தேதி க்குள் செப்பனிடும் பணியை முடிக்க அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் புதியதாக தார்ச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையிடமிருந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி அலுவ லகத்தில் கொடுக்க ப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற்று விரைவில் டெண்டர் விடப்பட்டு புதிய தார்ச்சாலை அமைக்கப்படும். இப்பணி மேலும் விரைவுப்படுத்த அடுத்த வாரத்தில் மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மண்டல அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.

    ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திட்டப்பணியின் பொறி யாளர் ராஜாமணி, தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் வாணி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மதுமிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சீனிவாசன், ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    மழை காலம் தொடங்க இருப்பதால் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழு கொள்ளளவு தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கொடிவேரி மற்றும் அவினாசி -அத்திக்கடவு திட்டத்தில் கூடிய விரைவில் நேரடியாக ஆய்வு செய்து விடுபட்ட பணிகள் சரி செய்யப்படவுள்ளது. திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுவணிகக்கடன்களும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் முத்ரா கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடன்களும் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஆய்வுக்கூட்டத்தில் ஊத்துக்குளி தாசில்தார் சைலஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி மற்றும் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராசுகுட்டி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.
    மதுரை:

    மதுரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள சாலை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.

    83-வது வார்டு பரமேஸ்வரன் பிள்ளை சந்து, பேச்சிபடித்துறை சந்து ஆகிய பகுதிகளிலும், தமிழ்ச்சங்கம் ரோடு, ஜெய்ஹிந்துபுரம் பாலிடெக்னிக் மெயின் ரோடு ஆகிய பகுதிகளிலும், ஜீவா நகர் விரிவாக்கம் 1-வது குறுக்குத் தெரு, 2-வது குறுக்குத்தெரு மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், ராமையா மெயின் தெரு 1-வது குறுக்குத் தெரு, 2- வது மற்றும் 3-வது குறுக்குத் தெரு ஆகிய தெருக்களிலும், முத்துப்பட்டி பாலாஜி மெயின் தெரு, முத்துப்பட்டி அவனியாபுரம் சாலை ஆகிய பகுதிகளிலும் என தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து பழங்காநத்தம் ரவுண்டானாவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்ட ஆணையாளர் அனீஷ் சேகர் இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம் குமார், செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×