search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road works"

    • ‘மாலைமலர்’ செய்தி எதிரொலியாக கீழக்கரை இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
    • மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை.

    குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள். மறு பக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கடந்த 6-ந்தேதி 'மாலைமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இருப்பினும் குறைந்த எண்ணிக்கையில் தொழிலா ளர்கள் வேலை செய்வதால் பணி தாமதமாக நடந்து வருகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சாலை பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிராஜ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • கூந்தங்குளம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முருகன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிராஜ்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தங்குளம் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு இடத்தில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மணிராஜ் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிராஜ், அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற வர்கள் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மூலக்கரைப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மணிராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் எவ்விதமான தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ அல்லது ஒளிரும் ஸ்டிக்கர்களோ வைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    • வீரவாஞ்சிநகர் 3-வது வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி பகுதியில் வீரவாஞ்சிநகர் 3-வது வடக்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேவர் பிளாக் சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து, கோவில்பட்டி அருகே வடக்கு திட்டக்குளம் ஊராட்சியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.50 லட்சம் மதிப்பில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனிசாமி, கவுன்சிலர் கவியரசன், ஆவின் தலைவர் தாமோதரன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் செல்வக் குமார், இனாம் மணியாச்சி ஊராட்சி வார்டு உறுப்பி னர் ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவிற்கு வந்திருந்த குழந்தைகளை பார்த்து பேசி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
    • புதிய தார் சாலை பணிகள் குறித்து மேயர் ஜெகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தகுளம் பள்ளி அருகில் உள்ள உணர்வு பூங்கா, குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

    இந்நிலையில் அங்கு மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பூங்காவிற்கு வந்திருந்த குழந்தைகளை பார்த்து அவர்களுடன் பேசி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாமன்ற உறுப்பினர் பாப்பாத்திஅம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி போல்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன் ஜாஸ்பர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவிந்திரன், சமூக ஆர்வலர் ஐசக் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மையத்தடுப்புகளில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் ஸ்ரீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவா் சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அவினாசி:

    அவிநாசி நகர பாஜக. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரத் தலைவா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் ஸ்ரீனிவாசன், ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவா் சந்துரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொதுசெயலாளா் மோகன் வரவேற்றாா். கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் லியாகத்அலி பேசினாா்.

    இதில் அவிநாசியில் போக்குவரத்து நெருக்கடி, தொடா் விபத்துகளை தடுக்க உடனடியாக அவிநாசி-சேவூா் சாலை சந்திப்பில் இருந்து பட்டறை பேருந்து நிறுத்தம் வரை சாலையை அகலப்படுத்தி மையத்தடுப்பு அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படும் கோவை பிரதான சாலை அவிநாசி அரசுக் கல்லூரி முதல்-முத்துச்செட்டிபாளையம் பிரிவு வரை மையத்தடுப்புகளில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகரப் பொருளாளா் ரமேஷ்குமாா் நன்றி கூறினாா். 

    • தா.பழூர் அருகே ரூ.48.81 லட்சத்தில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது
    • இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கோடங்குடி கிராமத்தில் இருந்து சோழமாதேவி செல்லும் மண் சாலையை விவசாய பயன்பாடுகளுக்காக மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2022-23, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22, 2022-23 திட்டங்களின் கீழ் ரூ.48 லட்சத்து 81 ஆயிரம் திட்ட மதிப்பில் சாலை பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம் (வட்டார ஊராட்சி), விஸ்வநாதன் (கிராம ஊராட்சிகள்), உதவி பொறியாளர் சுமதி, இளநிலை பொறியாளர் சரோஜினி, கோடங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா நடராஜன், துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும்.
    • நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் உமாப்பிரியா தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி வரவேற்றார். தீர்மானங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரவீன்குமார் படித்தார். கூட்டத்தில்

    நாகூரான்(அதிமுக): உத்திரங்குடி, மேலஉத்தி–ரங்குடி, குமாரமங்கலம், கீழ பாலையூர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். அபிவித்தீஸ்வரம் மயாண கொட்டகையை சீரமைக்க வேண்டும்.

    சத்தியேந்திரன்(திமுக): எண்கண் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு புதிய திருமணமண்டபம் கட்ட ரூ.3 கோடி, கோயில் திருப்பணிகள் புனரமைக்க ரூ.1 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    ஏசுராஜ்( அதிமுக): பெரும்புகழூர் ஊராட்சி வெட்டாற்றில் ரூ 8 லட்சம் மதிப்பில் படித்துறை கட்டியதற்கு நன்றி. அதுபோல் எங்கள் வார்டின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வாசு(திமுக): காட்டூர் ஊராட்சியில் 3 சாலைகள், சமுதாயகூடம் பழுது நீக்கம் செய்ததற்கு நன்றி.

    மீரா(அதிமுக): மேலராதாநல்லூர் குழு கட்டிடம் மோசமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

    துணைத் தலைவர் பாலச்சந்திரன்: கொரடாச்சேரி ஒன்றியத்தில் தேவைப்படும் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் உமாபிரியா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரடாச்சேரி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் ரூ.12 கோடி மதிப்பில் 28 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற்போல் அனைத்து பணிகளும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார். கூட்டத்தில் பொறியாளர்கள் ரவீந்திரன், சசிரேகா, வட்டார வளர்ச்சி தணிக்கை அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் சுப்புலெட்சுமி நன்றி கூறினார். 

    • நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நெடுஞ் சாலைத்துறை யின் மூலம் புதிய சாலைகள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ் சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இடை வெளி தடத்திலிருந்து இருவழிச்சாலை அகலப் படுத்தும் பணி நடை பெறுவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வை யிட்டார். அப்போது பணிகளை காலதாமதமின்றி முடித்திட அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23-ம் ஆண்டிற்கு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 28பணிகள் தேர்வு செய்யப்பட்டு 60.300 கிலோ மீட்டர் தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இதன் மூலம் இருவழிச் சாலைகளாக அகலப் படுத்தும் பணி மற்றும் புதிய பாலங்கள் அமைக்கும் பணி, விபத்துக்கள் நடை பெறும் பகுதியை கண்ட றிந்து சாலைகளை ேமம்படுத்தும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 19 பணிகள் 49.470 கி.மீ. தூரம் சாலைகள் அமைக்கும் பணி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சாலை பணிகளை சீரமைப்பதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருப்பதுடன் அதிகமாக விபத்துக்கள் நடை பெறக் கூடிய பகுதிகளை கண்ட றிந்து தொழில்நுட்ப முறையுடன் வடிவமைக்கப் பட்டவுடன் விபத்துகள் தவிர்க்கப்படுகிறது. இதுவும் வாகன ஓட்டி களுக்கு பாது காப்பாக இருக்கும்.

    இதே போல் நடப்பாண்டிற்கு பொது மக்களின் தேவையை அறிந்து கூடுதலாக சாலை அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்தி ரன் மற்றும் அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    • சாலை விரிவாக்க பணிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
    • நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது

    கடலூர்:

    கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நெல்லிக்குப்பம் பகுதியிலும் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக முதற்கட்டமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. நேற்று மதியம் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல், ஒரு சிலருக்கு ஆதரவாக பணிகள் மேற்கொண்டு வருவதால் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுதைகள் கட்சிமாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன்,  சமூக ஆர்வலர் குமரவேல், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணிகளுக்காக அளவீடு செய்த அளவில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இப்பணியை உடனடியாக நிறுத்தி, உரிய அளவீடு செய்த பின்னர் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய முறையில் விசாரணை நடத்தி பணிகள் நடைபெறாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்  இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பணிகள் மேற்கொண்டு இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

    • சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • கழிவுநீர் கால்வாய் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைத்து தரவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சி லரும், ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.நாகராஜ் மேயர் தினேஷ்கு மாரை நேரில் சந்தி த்து அடிப்படைவசதிகள் தொடர்பாகமனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- 24-வது வார்டுக்குட்பட்ட அம்மன் வீதிகள் முழுவதும் 4-வது குடிநீர்திட்ட குழாய் அமைக்கும் பணி நிறைவ டைந்துள்ள நிலையில் சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த பகுதியில் வீடுகளுக்கு இன்னும் பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்க ப்படவில்லை.அந்த பணிகளும் நிறைவடை ந்தால் சாலைகள் மேலும் பழுதடையும். எனவே வீடுகளுக்கான பாதாள சாக்கடைஇணைப்பு பணியை விரைந்து முடித்து அம்மன் வீதிகள் முழுவது ம்சாலையை சீரமைத்து தர வேண்டும்.மேலும் அம்மன் வீதிகளில் 70 சதவீதத்திற்கு மேல் கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து இருப்பதாலும், சாலைகள் குறுகிய சாலைகளாககாணப்படு வதாலும்கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல் வார்டுக்குட்பட்ட திருமலைநகர்,சத்யாநகர், அறிவொளிவீதி, டி.என்.சேஷன் வீதி,லட்சுமி தியேட்டர் பிரதான சாலை, ராமர் வீதி, சண்முகாநகர், ஆர்.பி.கே.கம்பெனி வீதி, முருங்கை தோட்டம், செல்லம்மாள் காலனி, திருநீலகண்டர்வீதி, அம்சவிநாயகர்கோவில் கிழக்கு பகுதி, ஆர்.ஜி.பி. குடோன் வீதி ஆகிய பகுதிகளில்கழிவுநீர் கால்வாய்பழுதடை ந்துள்ளதால்அதை சீரமைத்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.முன்னதாக 24-வது.வார்டு க்குட்பட்ட பகுதிகளில் காணப்படும்அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை படத்துடன் கூடிய தொகுப்பாக கவுன்சிலர் நாகராஜ், மேயர், கமிஷனர் ஆகியோ ரிடம் வழங்கினார்.

    பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடியிலிருந்து பரமநல்லூர் மேனாங்குடி வரையிலான சாலை 2650 மீட்டர் தொலைவிற்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2020-21 திட்டத்தின் கீழ் சாலை ரூ.2 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளைதிரு மருகல் ஒன்றிய பொறியாளர்கள் கவிதாராணி, செந்தில் ஆகியோர் பார்வையிட்டு சாலை அகலம் மற்றும் உயரம் அரசு அறிவித்த அளவிற்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

    பின்னர் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வின்போது சாலை ஆய்வாளர் விமலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    நிதி ஒதுக்கீடு மற்றும் விதிமுறைகளின்படி, ரோடு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    மடத்துக்குளம்:

    தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்ட பணிகளை, உள்தணிக்கை, கோப்பு குறித்த ஆய்வு மற்றும் கள ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தாராபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் பல்வேறு ரோடுகளில் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    மடத்துக்குளம் உட்கோட்டம், மாவட்ட முக்கிய சாலையான உடுமலை-கொமரலிங்கம் ரோட்டில் 2 கி.மீ., தொலைவுக்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான குழுவினர், நிதி ஒதுக்கீடு மற்றும் விதிமுறைகளின்படி, ரோடு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஈரோடு கோட்ட பொறியாளர் வத்சலா, தாராபுரம் கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.


    ×