search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பணிகள்"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.1.86 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணிகளை, மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, மாநகராட்சி தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குருக்கள்பட்டி முதல் மேலநீலிதநல்லூர் வரை சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கள்பட்டி முதல் மேலநீலிதநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பலவேசம், மேலநீலிதநல்லூர் கிளை செயலாளர் சண்முகப்பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி வெள்ளத்துரை, ஆத்மா, சேர்மன், கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டியன், முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை, ஒப்பந்ததாரர் சண்முகாதேவி, வீரபாண்டியன், அழகியபாண்டியபுரம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், நவ.7-

    நாகர்கோவில் மாநகராட்சி 7-வது வார்டு பள்ளிவிளை கிரவுண் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 37-வது வார்டு சமரச வீதி குறுக்கு தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சி லர்கள் மேரி ஜெனட் விஜிலா, செல்வலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், அணிகளின் நிர்வாகி கள் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு சாலைப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார். இன்று 6-வது வார்டுக்குட்பட்ட நீல நாடார் தெரு, மூன்லைட் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 7-வது வார்டுக்குட் பட்ட பள்ளிவிளை, ஆதி சக்தி தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மண்டல தலைவர் ஜவகர், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் பால் தேவராஜ் அகியா, பகுதி செயலாளர் சேக் மீரான், மாநகர துணைச் செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில், அக்.30-

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டு வீரசிவாஜி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டு காந்திபுரம் மெயின்ரோடு, பெட்ரோல் பல்க் அருகில் உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகர செயலாளர் ஆனந்த், ஜீவா, அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராஜன், சரவணன், வட்ட செயலாளர்கள் ரவி, விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 11-வது வார்டுக்குட்பட்டயாதவர் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி 45-வது வார்டுக்கு ட்பட்ட தம்மத்துக்கோணம் ஏ.டி. அம்பிகா சாலையில் (அரசு நடுநிலைப் பள்ளி அருகில்) ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 14-வது வார்டுக்குட்பட்ட பெரியார் தெருவில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி.

    11-வது வார்டுக்குட்பட்டயாதவர் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மாநக ராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, கவுன்சி லர்கள் சதீஷ், கலாராணி, ஸ்ரீலிஜா, ஜெயவிக்ரமன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலை வர் ஜவகர், பகுதி செயலா ளர்கள் ஜீவா, சேக் மீரான், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன், தொண்டர் அணி ராஜன், மாநகர திமுக தலைவர் பன்னீர் செல்வம் வட்டச் செயலாளர் சிவ குமார், வேல்முருகன், புனித பிரசாத் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
    • பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத், துணை ஆணையாளர்கள் செல்வநாயகம், கண்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள். 4-வது குடிநீர் திட்டப்பணிகள் குழாய் பதிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் பிரதான சாலையில் நடைபெற வேண்டியுள்ளது. அதுபோல் குழாய் பதிப்பு பணிகள் முடிந்த சாலையை செப்பனிடும் பணி நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைந்து செய்து காலதாமதம் இல்லாமல் விரைந்து செய்து முடிப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பு, குடிநீர் குழாய் பதிக்க சாலையில் குழிதோண்டும் பணி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் 16-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், 17-வது வார்டுக்குட்பட்ட ஹரீஸ் தெருவில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், 21-வது வார்டுக்குட்பட்ட செரியன் தெரு, நடஷா தெரு, தடி டிப்போ 4-வது குறுக்கு தெரு பகுதிகளில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, பகவதி பெருமாள், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் 20-வது வார்டுக்குட்பட்ட பிருந்தாவன் காலனியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 36-வது வார்டுக்குட்பட்ட செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 38-வது வார்டுக்குட்பட்ட பாரதி தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஆன்றோ ஸ்னைடா, ரமேஷ், சுப்பிரமணியம், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர், கவின் முகில் கார்டன் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 7-வது வார்டுக்குட்பட்ட கிரவுண் தெரு, மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    அதேபோல் 22-வது வார்டுக்குட்பட்ட பரேரா காலனி பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 48-வது வார்டு வெள்ளாடிச்சவிளை பகுதியில் ரூ.3.20 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர் பியஷா ஹாஜி பாபு, சுகாதார ஆய்வாளர்கள் சத்தியராஜ், பகவதி பெருமாள், மாநகர பகுதி செயலாளர்கள் சேக் மீரான், துரை, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளப்புறம் கிராம ஊராட்சியில் முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குளப்பு றம் ஊராட்சி தலைவர் மனோன்மணி, மாவட்ட கவுன்சிலர் லூயிசாள், ஒன்றிய கவுன்சிலர் கலா, ஊராட்சி துணை தலைவர் வினு, முஞ்சிறை மேற்கு ஒன்றிய செயலாளர் றாபி, வார்டு உறுப்பினர்கள் ஞானசுந்தரி, லைலா, ஜெயராணி, றீனா, அல்போன்சா, ஜெபகுமார், அனில் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 45-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் சாலையில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணி, 12-வது வார்டுக்குட்பட்ட ஒழுகினசேரி பழையாறு சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்தளம் அமைக்கும் பணிகளையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி.பள்ளி அருகில் அடைப்பட்டுள்ள மழைநீர் வடிகால் சரி செய்வது மற்றும் தழுவிய மகாதேவர் கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் கட்டுவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் சதீஸ், சுனில், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன், துணை இளைஞரணி சரவணன், வட்ட செயலாளர் சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    ×