search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்
    X

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் 16-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், 17-வது வார்டுக்குட்பட்ட ஹரீஸ் தெருவில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், 21-வது வார்டுக்குட்பட்ட செரியன் தெரு, நடஷா தெரு, தடி டிப்போ 4-வது குறுக்கு தெரு பகுதிகளில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும் தார்தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் கவுசிகி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, பகவதி பெருமாள், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×