search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகராட்சியில் பகுதியில் ரூ.40.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்
    X

    மாநகராட்சியில் பகுதியில் ரூ.40.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர், கவின் முகில் கார்டன் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற்றும் 7-வது வார்டுக்குட்பட்ட கிரவுண் தெரு, மாமூடு தெருவில் ரூ.11.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    அதேபோல் 22-வது வார்டுக்குட்பட்ட பரேரா காலனி பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 48-வது வார்டு வெள்ளாடிச்சவிளை பகுதியில் ரூ.3.20 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர் பியஷா ஹாஜி பாபு, சுகாதார ஆய்வாளர்கள் சத்தியராஜ், பகவதி பெருமாள், மாநகர பகுதி செயலாளர்கள் சேக் மீரான், துரை, அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×