search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி-ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி-ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • குருக்கள்பட்டி முதல் மேலநீலிதநல்லூர் வரை சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கள்பட்டி முதல் மேலநீலிதநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பலவேசம், மேலநீலிதநல்லூர் கிளை செயலாளர் சண்முகப்பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி வெள்ளத்துரை, ஆத்மா, சேர்மன், கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டியன், முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை, ஒப்பந்ததாரர் சண்முகாதேவி, வீரபாண்டியன், அழகியபாண்டியபுரம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×