என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.31 லட்சம் மதிப்பில் சாலை பணிகள்
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் 20-வது வார்டுக்குட்பட்ட பிருந்தாவன் காலனியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 36-வது வார்டுக்குட்பட்ட செந்தூராம் நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 38-வது வார்டுக்குட்பட்ட பாரதி தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளது. இந்த பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, பொறியாளர் பாலசுப்பிரமணியம், உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஆன்றோ ஸ்னைடா, ரமேஷ், சுப்பிரமணியம், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






