search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MDMK Councilor"

    • சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
    • கழிவுநீர் கால்வாய் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைத்து தரவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சி லரும், ம.தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளருமான ஆர்.நாகராஜ் மேயர் தினேஷ்கு மாரை நேரில் சந்தி த்து அடிப்படைவசதிகள் தொடர்பாகமனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :- 24-வது வார்டுக்குட்பட்ட அம்மன் வீதிகள் முழுவதும் 4-வது குடிநீர்திட்ட குழாய் அமைக்கும் பணி நிறைவ டைந்துள்ள நிலையில் சாலைகள்மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த பகுதியில் வீடுகளுக்கு இன்னும் பாதாளசாக்கடை இணைப்பு கொடுக்க ப்படவில்லை.அந்த பணிகளும் நிறைவடை ந்தால் சாலைகள் மேலும் பழுதடையும். எனவே வீடுகளுக்கான பாதாள சாக்கடைஇணைப்பு பணியை விரைந்து முடித்து அம்மன் வீதிகள் முழுவது ம்சாலையை சீரமைத்து தர வேண்டும்.மேலும் அம்மன் வீதிகளில் 70 சதவீதத்திற்கு மேல் கழிவுநீர் கால்வாய் பழுதடைந்து இருப்பதாலும், சாலைகள் குறுகிய சாலைகளாககாணப்படு வதாலும்கூடுதல் கவனம் செலுத்தி கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதே போல் வார்டுக்குட்பட்ட திருமலைநகர்,சத்யாநகர், அறிவொளிவீதி, டி.என்.சேஷன் வீதி,லட்சுமி தியேட்டர் பிரதான சாலை, ராமர் வீதி, சண்முகாநகர், ஆர்.பி.கே.கம்பெனி வீதி, முருங்கை தோட்டம், செல்லம்மாள் காலனி, திருநீலகண்டர்வீதி, அம்சவிநாயகர்கோவில் கிழக்கு பகுதி, ஆர்.ஜி.பி. குடோன் வீதி ஆகிய பகுதிகளில்கழிவுநீர் கால்வாய்பழுதடை ந்துள்ளதால்அதை சீரமைத்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.முன்னதாக 24-வது.வார்டு க்குட்பட்ட பகுதிகளில் காணப்படும்அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை படத்துடன் கூடிய தொகுப்பாக கவுன்சிலர் நாகராஜ், மேயர், கமிஷனர் ஆகியோ ரிடம் வழங்கினார்.

    ×