search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைப்பணிகள்"

    • நரிக்குடி ஒன்றிய சாலைப்பணிகள் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
    • விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் தேளி-மானாமதுரை எல்லை வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலையானது மிகவும் சேத மடைந்து மோசமான நிலை யில் குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் தேளி, தர்மம், கொட்டகாட்சியேந் தல், பூவாக்கன்னி, கனைய மறித்தான் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளி லிருந்து மானாமதுரை வரை சென்று பின்னர் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த சாலையைத்தான் பிரதான மாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த பகுதிகளிலிருந்து கல்லூரி, பள்ளிக்கூடம், கட்டிட வேலைக்கு செல் வோர் என பல்வேறு தரப்பி னரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலையானது நரிக்குடி யூனியன் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தேளி-மானாமதுரை எல்லை வரையிலான சாலை போடும் பணிக்காக ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டு ஆறு மாத காலமாகியும் சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத் திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மோசமான இந்த சாலை யால் கார், இருசக்கர வாக னம் போன்ற வாகனங் கள் அடிக்கடி பழுதாகி நிற்ப தோடு பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொது மக்களும் தாங்கள் செல்லும் இடங்களுக்கு குறித்த நேரத் திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

    விருதுநகர்-சிவகங்கை மாவட்ட எல்லைக்கு இருபுற மும் உள்ள சாலைப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட் டிற்கு வந்த நிலையில் ஒன்றிய நிதியிலிருந்து சாலைப்பணிக்காக தேவை யான நிதி ஒதுக்கப்பட்டும் நரிக்குடி யூனியன் கட்டுப் பாட்டிலுள்ள தேளி-மானா மதுரை எல்லை வரையி லான ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலான சாலைப்பணிகள் மட்டும் கிடப்பிலேயே போடப்பட் டுள்ளதால் கடல் தீவு போல காட்சியளிப்பதாகவும் அப் பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.

    சமீப காலமாக நரிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து நரிக்குடி யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள் ளாதது தங்களுக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாக வும் பொதுமக்கள் தெரி வித்தனர்.

    ஆகவே தேளி-மானா மதுரை எல்லையில் நரிக் குடி யூனியனிற்கு உட்பட்ட சாலைப்பணியை உடனடி யாக நிறைவேற்றி விரைவில் பொதுமக்களின் பயன்பாட் டிற்கு கொண்டு வர நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு, வடக்கு தெருவில் (பிஷப் ஹவுஸ் ரோடு) ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் 41-வது வார்டுக்குட்பட்ட சாஸ்தான் கோவில் தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் சீரமைப்பு பணி, 48-வது வார்டுக்குட்பட்ட தெற்கு புதுத்தெரு, பிர்தவுசியா நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி போன்றவையும் இன்று நடந்தது. இந்தப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சுஜின், தொழில் நுட்ப உதவியாளர் அரவிந்த், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஜோனா கிறிஸ்டி, அனிலா, பியாசா ஹாஜிபாபு, பகுதி செயலாளர் சேக் மீரான், அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராதாகிருஷ்ணன், பீட்டர் வட்ட செயலாளர்கள் ஆதித்தன், கரீம் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார்.

     ஊட்டி,

    கூடலூர் அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் பகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதனை ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார். பின்னர் ஸ்ரீமதுரை அடுத்த கொறவயல் பழங்குடியினர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின்கீழ் நடைபெற்று வரும் சாலை பணி மற்றும் வீடு கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கே. கங்காதரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • முதுகுளத்தூரில் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் பை பாஸ் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நகர் முழுவதும் பேவர்பிளாக் சாலை அக லப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் முது குளத்தூர் தாசில்தார் சடை யாண்டி தலைமையில் டி. எஸ்.பி. சின்ன கன்னு, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் டி.எஸ்.பி. சின்ன கண்ணு கூறும்போது இனிமேல் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடி வடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களை எச்சரிக்கை செய்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

    • 5 சிறுபாலங்கள் அமைக்கப்படுள்ள பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஆவல்நத்தம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பில் ஒரு வழி தடத்திலிருந்து இருவழி தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல், 3 இடங்களில் தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் மற்றும் 5 சிறுபாலங்கள் அமைக்கப்படுள்ள பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது தார் சாலையின் தரத்தை பரிசோதனை செய்தார். தொடர்ந்து கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14.10 கி.மீ நீளமுள்ள 3-மாவட்ட சாலைகள் ரூ.17 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள், இதர மாவட் யாளர் சரவணன், உதவிக ்கோட்டப்பொறியாளர் ஜெய்குமார், உதவிக் கோட்டப்பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) பத்மாவதி, உதவிப்பொறியாளர் ரியாஸ் மு         கமது மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது
    • வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி சென்று வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் குந்தா ரோட்டில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்காக சாலையோரத்தில் மண் வெட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே ரோட்டில் ஆங்காங்கே குவியல் குவியலாக மண் கொட்டப்பட்டு உள்ளது.

    இது மழை காலம் என்பதால் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக, சாலை முழுவதும் நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    எனவே அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் சிரமங்களுக்கு மத்தியில் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊட்டி மஞ்சூர் குந்தா பகுதியில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
    • திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் - பல்லடம் ரோடு தென்னம்பாளையம், டி.எம்.சி., காலனி அருகே ரோட்டின் குறுக்கில் சிறுபாலம் கட்டி மழை நீர், கழிவு நீர் ஆகியன அருகேயுள்ள ஓடைக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

    இச்சூழலில் ரோட்டின் ஒரு புறம் இப்பணிகள் முடிந்து, மறுபுறம் நடந்து வருகிறது.

    தற்போது திருப்பூரை நோக்கி செல்லும் ரோடு முழுவதுமாக இப்பணிக்காக பேரிகார்டு தடுப்பு கொண்டு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து சென்று வருகிறது. மாலை, இரவு நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருப்பூர் - காங்கயம் கிராஸ் ரோட்டிலிருந்து நல்லூர்,விஜயாபுரம் வழியாக இந்த ரோடு அமைந்துள்ளது.இந்த ரோட்டில் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் நகரப்பகுதியில், ஏராளமான பஸ் நிறுத்தம், முக்கிய ரோடு பிரிவுகள், நான்கு முனை ரோடு சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களும் அமைந்துள்ளன.

    இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையாக உள்ள நிலையிலும், அகலமாக அமைந்துள்ளது. இருப்பினும் முக்கிய சாலை சந்திப்பு மற்றும் சிக்னல் பகுதிகளில் இதன் தற்போதைய அகலம் பயன்பாட்டுக்கு ஏற்ற அளவில் இல்லாத நிலை இருந்தது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ரோட்டில் வளைவான பகுதி மற்றும் சிக்னல் அமைந்துள்ள இடங்களில் ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் பள்ளக்காட்டு புதூர்,ராக்கியாபாளையம் பிரிவு, காசிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு அகலப்படுத்தப்படுகிறது.இதற்காக ரோடு அமையும் இடத்தில் தார் ரோடு போடும் வகையில் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதனால், சிக்னல் பகுதிகளில் ப்ரீ லெப்ட் முறையில் வாகனங்கள் கடந்து செல்ல ஏதுவாக அமையும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

    ×