search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of encroachments"

    • அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது.
    • வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆஸ்பத்திரி முன் பகுதியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் பேரூராட்சி பணியாளர்கள் அக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

    அப்போது ஆக்கிரமிப் பாளர்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருவம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடமும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டனர். அதன் பேரில் இன்று காலி செய்ய வேண்டுமென போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

    • வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது
    • போலீசார் சமாதானம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகரில் உள்ள அணைக்கட்டு சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி படுகின்றனர்.

    எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலாஜா நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    அதன்படி சோளிங்கர் சாலை, பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நேற்று வாலாஜா- அணைக்கட்டு சாலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள், வீடுகளின் ஆக்கிரமிப்பு மேற்கூரைகள், விளம்பர போர்டுகள் மற்றும் கட்டுமானங்கள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன.

    வாலாஜா நகராட்சி ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதுகுளத்தூரில் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் பை பாஸ் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நகர் முழுவதும் பேவர்பிளாக் சாலை அக லப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் முது குளத்தூர் தாசில்தார் சடை யாண்டி தலைமையில் டி. எஸ்.பி. சின்ன கன்னு, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் டி.எஸ்.பி. சின்ன கண்ணு கூறும்போது இனிமேல் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடி வடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களை எச்சரிக்கை செய்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

    • பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • கோவில் இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    பழனி:

    பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கும்பாபிஷேக பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவில் முன்புறம் மற்றும் சன்னதிவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    • அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு எஸ். புதுக்கு ப்பத்தில் குட்டையாண்டி குளம் உள்ளது. இந்தக் குளம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு - சத்திரம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய் துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அளவீடு செய்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த தாசில்தார் ஆனந்தி உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 15-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் எந்திரங்களை வைத்து அகற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் புத்துக்கோவில் பகுதியில் சென்னை - பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலை யிலும், பெங்களூரு-சென்னை செல்லும் சர்வீஸ் சாலையிலும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றும் பணிகள் 3-வது நாளாக நேற்று நடைபெற்றது.

    இதில் 15-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப் பட்டது. அம்பலூர் போலீசார் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    • போலீசார் பாது காப்புடன் நடந்தது
    • சர்வீஸ் சாலையிலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே புத் துக்கோவில் பகுதியில் கோவில் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட் டிடங்களை தேசிய நெடுஞ் சாலை துறையினர் பொக் லைன் எந்திரங்களை வைத்து நேற்று முன்தினம் அகற்றினர்.

    தொடர்ந்து நேற்று 2-வது நாளாக புத்துக்கோவில் பகு தியில் சென்னை-பெங்களூரு செல்லும் சர்வீஸ் சாலையி லும், பெங்களூர்- சென்னை செல்லும் சர்வீஸ் சாலையி லும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த கடைகள் அகற் றும் பணிகள் நடைபெற்றது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற் றப்பட்டது. வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பழனி மற்றும் அம்பலூர் போலீசார் பாது காப்புடன் தொடர்ந்து ஆக் கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    • கலெக்டர் ஆய்வு
    • ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் தாலுகா குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ் சாலையையொட்டி வடுகந்தாங்கல் உள்ளது. இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக ரூ.30 லட்சத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டி.எம்.கதிர் ஆனந்த் எம். பி. ஒதுக்கி உள்ளார்.

    தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் பஸ் நிலையம் அமைவதற்கான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணியை தாசில்தார் அ.கீதா, ஒன்றியக்குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல் பனா, பெ.மனோகரன், மேலாளர் பா.வேலு, துணை தாசில் தார் ப.சங்கர், வருவாய் ஆய்வாளர் சரவணன், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி ஆகியோர் பார்வையிட்டனர்.

    • 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
    • சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட 22 மற்றும் 23- வது வார்டு சுமங்கலி சில்க்ஸ் பிரிவு சாலையிலிருந்து, பாப்பாபட்டி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையினை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் சாலை குறுகிய அளவில் இருந்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் இருந்து வந்தன.

    இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்து அப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது . இதனை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    • திருப்பத்தூர் அருகே ஊரணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆ. தெக்கூர் கிராமத்தில் நகரத்தார்களால் கட்டப்பட்ட 120 ஆண்டு கால மீனாட்சி சுந்தரேஸ்வரரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பு 5 ஏக்கர் பரப்பளவில் ஊரணி இருந்தது. ஆனால் இந்த ஊரணியைச் சுற்றி வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமித்த தால் தண்ணீர் வரத்து பாதை அடைபட்டு பயன்பாடு இல்லாமல் போனது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டி 2 ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்து ஊரணியை சீரமைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த 17-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் தலைமையில் ஊரணியின் மேற்குப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் விநியோகத்தை தடை செய்தனர்.

    மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரணியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இருந்து வரும் சுமார் 47 குடியிருப்பு பகுதிகளின் உரிமை யாளர்களுக்கு மாற்று இடங்களில் 3 சென்ட் நிலம் வழங்கி, வரும் நாட்களில் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளால் பொன்னமராவதி-திருப்பத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கோவிலை இடிக்க எதிர்ப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த மருத்துவமனை சாலையின் இருபக்கமும் கட்டிடங்கள் உள்ளன. நோயாளிகள் சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    அதன் அடிப்படையில் ரூ.13.½ கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதன் ஆரம்ப கட்ட பணி தொடங்கப்படுகிறது.

    அதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் வரை சாலையை விரிவுபடுத்துவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் ஓரம் உள்ள கடைகள் மற்றும் பயனியர் நிழல் கூடம் போன்றவற்றை அகற்றினர். சாலை ஓரம் இருந்த பழமையான நாகம்மன் கோவில் முன்பு உள்ள மண்டபம் மற்றும் கோவில் பூஜை சாமான்கள் வைக்கும் அறை போன்றவற்றை அகற்றினர்.

    கோவிலின் கருவறை இடிக்க முற்பட்டபோது பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலால் நெடுஞ்சாலை துறைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வாதிட்டனர்.

    இன்ஸ்பெக்டர் காண்டீபன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கோவில் இடிக்கும் பணியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    • பிற பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று சிலர் குற்றம் சாட்டினர்.
    • நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து பிரதான ரோடுகள் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் கல்லாங்காடு செல்லும் ரோட்டில், இருபுறமும் கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்காக, நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் பொக்லைன் வாகனத்துடன் அங்கு சென்றனர்.

    கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தனர். இதனால், கடை உரிமையாளர்கள், பந்தல், ெஷட், போர்டுகள், பொருட்கள் ஆகியவற்றை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர்.

    இந்நிலையில், நால்ரோடு பகுதியில் ஒரு ரோட்டில் மட்டும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதாகவும், பிற ரோடுகளில் அது குறித்து கண்டு கொள்ளாமல் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி, கட்டட உரிமையாளர்கள், கடைக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால், பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து எந்த நோட்டீசும் வழங்கவில்லை. பிற பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்று சிலர் குற்றம் சாட்டினர்.

    அதிகாரிகள் தரப்பில், ஆக்கிரமிப்பு அகற்றுமாறு இரு முறை ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று, நோட்டீஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×