search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.39½ லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள்
    X

    நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.39½ லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள்

    மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு, வடக்கு தெருவில் (பிஷப் ஹவுஸ் ரோடு) ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் 41-வது வார்டுக்குட்பட்ட சாஸ்தான் கோவில் தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் சீரமைப்பு பணி, 48-வது வார்டுக்குட்பட்ட தெற்கு புதுத்தெரு, பிர்தவுசியா நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் பணி போன்றவையும் இன்று நடந்தது. இந்தப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சுஜின், தொழில் நுட்ப உதவியாளர் அரவிந்த், மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் ஜோனா கிறிஸ்டி, அனிலா, பியாசா ஹாஜிபாபு, பகுதி செயலாளர் சேக் மீரான், அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், ராதாகிருஷ்ணன், பீட்டர் வட்ட செயலாளர்கள் ஆதித்தன், கரீம் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×