search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைபணிகள்"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது

    நாகர்கோவில் மாநகராட்சியில் 17-வது வார்டுக்குட்பட்ட நெசவாளர் காலனி, பாரதி தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, ஏசுபக்தன் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 32-வது வார்டுக்குட்பட்ட சைமன் நகர் 5-வது குறுக்கு தெருவில் ரூ.18.72 லட்சம் மதிப்பிட்டில் தார் சாலை, 23-வது வார்டுக்குட்பட்ட கே.பி. ரோடு, கிறாஸ் தெருவில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைப்பது போன்ற பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிகி, சிஜி பிரவின், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் துரை, சேக் மீரான், இளைஞரணி சரவணன், பொறியாளர் அணி ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் மைக்கேல் ராஜ், சுரேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் மகேஷ் இன்று காலை 44-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாகவும், ரோட்டோரமுள்ள ஆக்கிரமிப்புகளை மாற்றவும், தெரு முடியும் இடத்தில் நீர்உறிஞ்சி குழி அமைக்கவும் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெருக்களில் ரோட்டோரமுள்ள செடிகளை வெட்டி மாற்றவும், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரை முறைப்படுத்த நீர்உறிஞ்சு குழி அமைக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் மேயர் மகேஷ் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    மாநகராட்சி நிர்வாக அலுவலர் ராம்மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியம், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், பொதுக்குழு உறுப்பினர் சதாசிவன் உட்பட பலர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டிலும், 17-வது வார்டு ஸ்காட் நகர் பகுதியில் ரூ.48.75 லட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவிப் பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜா, கவுசிகி, பகுதி செயலாளர் சேக்மீரான் வட்டச் செயலாளர் பிரபாகரன், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம்-தென்காசி சாலையை செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதனை எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகள், பாதாளசாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் என மூன்று வளர்ச்சி பணிகளும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தென்காசி மெயின்ரோட்டில் செப்பனிடும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேருசிலை முதல் காந்திசிலை வரை செப்பனிடும் பணி முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதற்கடையே பழைய பஸ்நிலையம் தொடங்கி சொக்கர்கோவில் வரை உள்ள தென்காசி மெயின் ரோடான தேசிய நெடுஞ்சாலையில் செப்பனிடும் பணி தொடங்கியது. தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா ஆகியோர் சாலையில் இறங்கி நடந்து சென்று இந்த பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி னார்கள்.

    அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், குறிப்பிட்ட தேதி க்குள் செப்பனிடும் பணியை முடிக்க அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் புதியதாக தார்ச்சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையிடமிருந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி அலுவ லகத்தில் கொடுக்க ப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற்று விரைவில் டெண்டர் விடப்பட்டு புதிய தார்ச்சாலை அமைக்கப்படும். இப்பணி மேலும் விரைவுப்படுத்த அடுத்த வாரத்தில் மதுரையில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மண்டல அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளோம் என்றார்.

    ஆய்வின்போது நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திட்டப்பணியின் பொறி யாளர் ராஜாமணி, தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    ×