search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.19.33 கோடியில் கிராம தார்சாலை பணிகள்
    X

    ரூ.19.33 கோடியில் கிராம தார்சாலை பணிகள்

    • கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஊராட்சி ஒன்றியம் சுந்தரம்பள்ளி கிராமத்தில் பிரதம மந்திரி சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் சுந்தரம்பள்ளி முதல் நத்தம் காலனி வரையும், சின்னாரம்பட்டி ஊராட்சி, தோரணபதி முதல் மைக்கா மேடு வரை ரூ.55 லட்சத்திலும், கொரட்டி ஊராட்சி தண்டுக் கானுர், மோழிகடை மங்கலப்பள்ளி வரை ரூ.1 கோடியே 44 லட்சத்திலும், மட்றப்பள்ளி ஊராட்சி, காடவல்லி ஏரி மேற்கத்தியானூர் புதுப்பட்டி வரை ரூ.2 கோடியே 12 லட்சத்திலும், ஜவ்வாது மலையில் மேலூர் யாம சாலை, சின்னவட்டானூர் கிராம சாலை என ரூ.19 கோடியே 33 லட்சம் செலவில் கிராம தார் சாலைகள் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை சி.என்.அண் ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜி ஆகியோர் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்து பேசினர்.

    கந்திலி ஒன்றிய பகுதிகளில் முதல்முறையாக 17 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.19 கோடியே 33 லட்சத்தில் ஒரே நாளில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×