search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VSR Jagatheesh"

    • விஜயாபதி பஞ்சாயத்தில் முடிவடைந்த பணிகளை வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் திறந்து வைத்தார்.
    • ஆவுடையாள்புரத்தில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி பஞ்சாயத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட திட்டங்களுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.மேலும் முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தார்.விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். மேலும் ஆவுடையாள்புரத்தில் ரூ. 4.80 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும், தோமையார்புறத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் சாலைக்கும், விஜயாபதியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி,ஒன்றிய கவுன்சிலர்கள் ஆவுடை பாலன், மெளலின், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் சகாயராஜ்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,மாவட்ட பிரதிநிதி கோவிந்தன்,வேலப்பன்,தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப் பாளர் கேனிஸ்டன், நவ்வலடி சரவண குமார், கஸ்தூரிரெங்கபுரம் பாலன், ராதாபுரம் அரவிந்த்,சிதம்பரபுரம் முருகன், சந்தியாகு, ராஜேஷ், ரீகன், யேசுதாஸ், சிவசுப்ரமணியம், அய்யப்பன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், எழில் ஜோசப், குமார், காமில், சாகுல் ஹமீது, முத்தையா, கோகுல், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×