search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raid"

    • பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
    • இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பெரமசாமி பிள்ளை விதியில் ஜுவ்வல்லரி நடத்தி வரும் கைலாஷ் என்பவர் கடையில், கடந்த 10-ந்தேதி, காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச் சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்ற வாலிபர், 12 பவுன் போலி தங்க தங்க நகையை, விற்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில்தான் (35) என்பதும், இது போன்ற போலி தங்க நகை விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர் புதுவை போலீஸ் துறையில் சஸ்பெண்ட் ஆன, சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது நெருங்கிய தோழி (கள்ளகாதலி) புவனேஸ்வரி (35) காரைக்காலைச் சேர்ந்த ரமேஷ் (32) ஆகியோர் உள்ளது தெரியவந்தது. இதில் ரிபாத் காமில்தான், ஜெரோம் மற்றும் ரமேஷை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் போலீசார் விசாரனை மேற்கொ ண்டபோது, தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு நபர்களை வைத்து இது போன்று போலி நகையை வங்கிகளில் வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள புவனேஸ்வரியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.       

         காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த முகமது மைதீன் (35) என்பவர், காரைக்காலில் உள்ள புதுவை பாரதியார் வங்கியில் 30 பவுன் போலி தங்க நகையை வைத்து, கடன் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் முகமது மைதீனை நேற்று கைது செய்தனர் .,இந்நிலையில், காரைக்காலில் உள்ள தனியார் நிதி நிறுவனமான கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிட் வாங்கி கிளையில், காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த தேவதாஸ் (38) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 12 பவுன் போலி தங்க செயினை அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் பெற்றுள்ளார். இதுநாள் வரை நகை கடன் பெற்றதுக்கு வட்டி ஏதும் செலுத்தாததால் வங்கி மேலாளர் நகையை பரிசோதித்தார். இதில் அது போலி நகை என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேவதாஸை தேடி வருகின்றனர். புவனேஸ்வரி மற்றும் தேவதாஸ் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா‌ என‌‌ வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.

    கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.

    தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 400 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 9 ரவுடிகளின் வீட்டில் இருந்து 5 வாள், 2 கத்தி, 1 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ரவுடிகள் மீண்டும் தலை தூக்குவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் ரவுடிகள் தொடர்பாக பட்டியல் தயார் செய்தனர். மதுரை மாநகரில் மட்டும் 400 ரவுடிகள் வசிப்பது தெரிய வந்தது.

    ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சோதனை நடந்தது. 400 ரவுடிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்துபுரம், திடீர்நகர், கூடல்புதூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 ரவுடிகளின் வீட்டில் இருந்து 5 வாள், 2 கத்தி, 1 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பாலாஜி, கார்த்திகேயன் என்ற மெண்டல் கார்த்திக், கருப்பையா என்ற போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேசுவரன் என்ற பெயிண்டர் விக்கி, பழனிக்குமார், மணிகண்டன் என்ற உசிலை மணி ஆகிய 9 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறை வாக உள்ள ரவுடிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கூறுகையில், மதுரை மாநகரில் ரவுகளின் நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக கண்காணிக்க உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபடும் ரவுடிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் 60 இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் நேற்று முன்தினம் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று முன்தினம் காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னை அய்யப்பன் தாங்கல் அசோக் ரெசிடென்சி ஓட்டல், அண்ணா நகர் பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதேபோல ஆதித்யா ராம், அம்பாலால் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை நீடித்து வருகிறது.

    வேலூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பாலால் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. குடியாத்தத்தை சேர்ந்த ஜவரிலால் ஜெயின் இதனை நடத்தி வருகிறார்.

    வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, விஐபி சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் குடியாத்தம் சந்தபேட்டை பகுதியில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வருமானவரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.

    குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள அம்பாலால் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று 3வது நாளாக சோதனை நடைபெற்றது. அம்பாலால் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 7½ கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல குடியாத்தத்தில் உள்ள தனியார் பீடி கம்பெனி, விருதம்பட்டு பகுதியில் உள்ள 100ம் நம்பர் பீடி கம்பெனியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

    வருமான வரி சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர், குடியாத்தத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
    • பிரதமர் மோடி குறித்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் சோதனை.

    'இந்தியா மோடி மீதான கேள்வி' என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

    குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஆவணப்படத்தின் யூ டியூப் வீடியோ மற்றும் அதன் இணைப்புகளை கொண்ட டுவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கி இருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.

    பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த டிஜிட்டல் ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து சேகரித்ததாகவும் தெரிகிறது.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நெல் அறுவடை நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அதில் 14 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.




    • குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாகவும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை வைத்து நகை பறிப்பு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவ தாகவும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகவும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபுவுக்கு புகார்கள் வந்தன.

    இந்த புகார்களின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பெயரில் திருப்பூர் மாநகரில் அனைத்து போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் திடீர் வாகன சோதனை நடைபெற்றது. முக்கியமான சாலைகளில் ஆங்காங்கே போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர்.

    திருப்பூர் மாநகர் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகர போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • வீடுகளில் ஆயுத சோதனை
    • 18 ரவுடிகள் தலைமறைவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி, ஏடிஎஸ்பி மதியழகன் தலைமையில் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் முன்னிலையில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர்கள் வினோத் கண்ணன், ராம்குமார், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் அசோகன், குமார் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் பெரம்பலூர் சங்குப் பேட்டை, திருநகர், கோனேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் திடிர் சோதனை செய்தனர்.அப்போது ரவுடிகள் வீட்டில் உள்ளனரா ? எங்கு உள்ளனர் ? குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா என ரவுடிகளிடமும், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடப்பட்ட 48 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 ரவுடிகளில் இதுவரை குண்டாஸ் சட்டத்தில் 25 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ரவுடிகள் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளனர். 3 ரவுடிகள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். . 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேர் ஆர்டிஓ உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீண்டும் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 18 ரவுடிகள் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரி களுக்கும் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சி.ஜி.இ. காலனி, எம்.ஜி.ஆர் நகர் உட்பட பல இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அப்போது தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்தியராஜ் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 22 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    • பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

    நெல்லை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    ரெயில் நிலையம்

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் மாநகர பகுதிகளின் முக்கிய இடங்களில் வெடிகுண்டு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருப்புப் பாதை இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ஜான், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரெயில்வே தண்டவாளம்,ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் ஆகியவையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகரணங்கள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து ரெயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கும் இருசக்கர வாகனங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் முழுவதும் அதிநவீன கருவிகள் கொண்டு தணிக்கை செய்யப்பட்டது.

    இதேபோல் நெல்லை மாநகர் பகுதிகளில் இருக்கும் முக்கிய அலுவலகங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கேட்பாரற்ற நிலையில் இருக்கும் அனைத்து விதமான வாகனங்களும் தீவிர தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.
    • ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    சேலம்:

    சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.

    இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    இதையடுத்து அந்த போலி கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே ஊரக வேளாண் விவசாயிகள் கூட்டுறவு சங்க லிமிடெட்டின் என்ற பெயரில் கிளை வங்கி செயல்பட்டது தெரியவந்தது. இங்கு கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினர்.

    அப்போது வங்கி மேலாளர் விமல்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    ×