search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal Jail"

    • புழல் ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவது கஞ்சா பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
    • கைதிகள் உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடந்தது.

    செங்குன்றம்:

    புழல் விசாரணை ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும் தண்டனை ஜெயிலில் 800-க்கும் மேற்பட்ட கைதிகளும் மகளிர் ஜெயிலில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சமீப காலமாக புழல் ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவது கஞ்சா பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இதனை தடுக்கும் முறையில் இன்று அதிகாலை 6 மணிக்கு கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் தலைமையில் புழல் ஜெயில் டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ், புழல் போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் கைதிகள் உள்ள அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 மணிநேரம் சோதனை நடந்தது. இந்த சோதனையில் செல்போன் கஞ்சா எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சோதனை தொடரும் என துணை கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்தார்.

    • நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார்.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட நாகராஜை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செங்குன்றம்:

    கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்து இருந்தனர். அவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த போது நாகராஜிக்கு உடலில் சொறி, சிரங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்காள தேசத்தினர் 19 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தொழிலாளர்களோடு வங்காள தேசத்தை சேர்ந்தவர்களும் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி வேலை பார்த்து வருவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் ரமேஷ் கிருஷ்ணன், 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் திருப்பூரில் உள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பெயர் பட்டியலை வாங்கி சரிபார்த்தனர்.

    அப்போது சிறுபூலுவம் பட்டி அத்திக்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வங்காள தேசத்தினர் தங்கி வேலை பார்ப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு பணியாற்றி வ ந்த வங்காள தேசத்தை சேர்ந்த அலாம்கிர் (27),சுமன்(21), மஞ்சுருல் ஹக் (24), அப்துல் கலாம்(31), கோகான் (30), டோலான் ஹூசைன் (21), ஜோஜிப்மியா (27), முக்தர் மியா(35), ஆஷிக் (25), லல்மியா(24), கபீர் ஹூசைன்(30), நூருல் (23),‌ ஷமின் (21), ஹபிபர் (25), குகான் (25), ரபிக்யுசிலிலேம் (50), ஜகான்கிர்லம் (40), பிஜாஸ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த ஆதார் அட்டையை ஆய்வு செய்தபோது அவை போலியானது என்பது தெரிய வந்தது. இந்த ஆதார் அட்டைகளை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அச்சடித்து உள்ளனர். ஒரு ஆதார் அட்டைக்கு ரூ. 1500 வரை கொடுத்துள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவர்கள் அனைவரும் திருப்பூர் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது வங்காள தேசத்தினர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் மாநகர போலீசார் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அனுமதியின்றி தங்கி உள்ள வங்காள தேசத்தினர், நைஜீரியாவை சேர்ந்தவர்கள் பற்றி தகவல் கொடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளனர்.



    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர். #PuzhalJail #Prisoners
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    இதற்காக சிறை வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிடயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறை குற்றவாளிகள் 150 பேருக்கு நீதிபதிகள் தனித்தனியாக ஆலோசனை மற்றும் அறிவுரை கூறினர்.



    ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.

    புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PuzhalJail #Prisoners

    ஆரோவில் அருகே கஞ்சா விற்று கைது செய்யப்பட்ட லிபியா நாட்டு மாணவர் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் உள்ளது. சர்வதேச நகரமான இங்கு பல்வேறு வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    இதற்கிடையே ஆரோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெரியமுதலியார் சாவடியில் ஒரு வீட்டில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லிபியா நாட்டை சேர்ந்த ‌ஷபீது (வயது23) என்பதும் இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.ஏ. படித்து வந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் அவர் பெரிய முதலியார் சாவடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சாவை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ‌ஷபீதுவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    ‌ஷபீதுவின் பாஸ்போர்ட் காலாவதியான பின்னரும் அவர் தொடர்ந்து பெரியமுதலியார் சாவடியில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இதுபற்றி லிபியா நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்து உள்ளனர். #tamilnews
    புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    செங்குன்றம்:

    புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் சிறை துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    புழல் மத்திய சிறையில் சிறை விதிகளுக்கு புறம்பாகவும், எதிராகவும் பணம் படைத்த குற்றவாளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் குறிப்பிட்ட சில ரவுடிகளுக்கும், ஆதரவாக சிறை நிர்வாகம் செயல்பட்டதன் விளைவாக சிறை அபாய கட்டத்தை நெருங்கி விட்டது.

    பணம் படைத்த மற்றும் பல கோடி மோசடி வழக்குகளில் (குட்கா வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கும்) செல்போன், கஞ்சா, சிகரெட் மற்றும் பலவிதமான சுவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு சிறை துறை அதிகாரிகள் உதவி செய்கிறார்கள்.

    குற்றவாளிகளை சந்திக்க வரும் நண்பர்கள், உறவினர்கள் சிறப்பு நேர்காணல் என்ற பெயரில் தனியாக சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அது போன்று வருபவர்களிடமும் பணம் வசூலிக்கப்படுகிறது.

    ஒரு குற்றவாளிக்கு சலுகைகள் கிடைக்க வேண்டுமென்றால் முதல் கட்டமாக ரூ.2 லட்சம் கொடுக்க வேண்டும். போதைப் பொருள் கடத்தல், கொலை வழக்கு கைதிகள், தீவிரவாதிகளுக்கும் சலுகைகள் காட்டப்படுகின்றன.

    அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதி சட்ட விரோத செயல்களுக்கு கூடாரமாக இருந்து வருகிறது. எந்த ஒரு சிறைக் காவலரும் அங்கு செல்ல இயலாது. தீவிரவாதிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

    போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் சிறையின் உள்ளே இருந்தபடியே வெளிநாடுகளுக்கு போதை பொருளை கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான செல்போன்களையும் சிம்கார்டுகளையும் கடத்தி சென்றும் சிறைக்கு வெளியில் இருந்து வீசியும் உதவிகள் செய்யப்படுகின்றன.

    தீவிரவாதிகள் எங்களில் பலரை கொலை செய்து விடுவதாகவும் மீறி அவர்களை எதிர்த்து செயல்பட்டால் பணியிட மாற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். ஏற்கனவே இது போன்ற நேர்மையாக இருந்த பல சிறைக் காவலர்களை பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் கூறி மிரட்டுகிறார்கள்.

    இதுபற்றி சிறை துறை அதிகாரியிடம் கூறியபோது இவையெல்லாம் அரசு சம்பந்தப்பட்டது. நீங்கள் இதை கண்டு கொள்ள வேண்டாம் என்று புறக்கணித்து விட்டார். மேலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டவை எல்லாம் நாம் எதுவும் செய்ய இயலாது. காவல் துறைதான் செய்ய வேண்டும். அதனால் உங்கள் பணிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள் எனக் கூறி விட்டார்.

    புழல் சிறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போவது பற்றி நேரடியாக எங்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டால் நாங்கள் எங்களிடம் உள்ள பல ஆதாரங்களை தர தயாராக உள்ளோம். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PuzhalJail
    போரூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    போரூர்:

    எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.

    இந்த நிலையில் கடந்த மாதம் எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியில் பதுங்கி இருந்த முன்டகுட்டியை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    முன்டகுட்டி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எம்ஜிஆர் நகர் போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று முன்டகுட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டார்.

    புழல் ஜெயலில் அடைக்க சென்ற போது கொலைக் கைதியிடம் இருந்து 40 போதை மாத்திரை மற்றும் 50 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
    செங்குன்றம்:

    சென்னை அரும்பாக்கம் 5-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கார்த்திக் (25). கடந்த 23-ந்தேதி அரும்பாக்கத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் இவரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் நேற்று மாலை கார்த்திக்கை புழல் ஜெயிலில் அடைக்க அழைத்து வந்தனர். ஜெயில் நுழைவாயிலில் இருந்த போலீசார் கார்த்திக்கை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 40 போதை மாத்திரைகளும், 50 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போதை மாத்திரை, கஞ்சா ஜெயிலுக்குள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #PuzhalJail
    புழல் ஜெயிலில் இன்று அதிகாலை 100 போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    செங்குன்றம்:

    புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, சொகுசு வாழ்க்கை தாராளமாக கிடைப்பதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்ட டி.வி.க்கள், 80 ரேடியோக்கள், பிரியாணி செய்ய பயன்படுத்தும் அரிசி, மெத்தைகள் உள்ளிட்ட வைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனை முடிந்த பின்னரும் தொடர்ந்து கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் புழல் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் புழல் சரக உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஜெயந்தி உள்பட 100 போலீசார் ஜெயிலுக்கு வந்தனர்.

    அவர்கள் அதிரடியாக தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது தண்டனை ஜெயில் கழிவறை அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 2 செல்போன்களை கைப்பற்றினர். விசாரணை கைதிகள் அறையில் இருந்த 2 கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது.

    செல்போன், கஞ்சா எப்படி கைதிகளுக்கு கிடைக்கிறது. இதில் ஜெயில் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    புழல் ஜெயிலில் 100 போலீசார் அதிரடியாக சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புழல் ஜெயிலில் விசாரணை கைதிகள் அறையில் 2ஆயிரத்து 600 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 154 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைதிகளிடையே மோதலை தடுக்கவும், இட நெருக்கடியை போக்கவும் 154 குண்டர் சட்ட கைதிகள் 2-வது பிளாக்கில் உள்ள தண்டனை கைதிகள் அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். #PuzhalJail
    புழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    மாதவரம்:

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கைதியிடம் மீண்டும் செல்போன் சிக்கி உள்ளது.

    புழல் ஜெயிலில் நேற்று காலை ஜெயிலர் உதய குமார் மற்றும் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதான நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யாவின் அறையில் செல்போன் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி? ஜெயில் ஊழியர்கள் உதவினார்களா? யார்-யாருடன் பேசி உள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #PuzhalJail
    கொடுங்கையூரில் சமீப காலமாக ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வந்த 2 ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர். #PuzhalJail
    பெரம்பூர்:

    கொடுங்கையூரில் ராஜ ரத்தினம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். எழில்நகரை சேர்ந்தவர் இம்மானுவேல்.

    இவர்கள் 2 பேரும் கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி, அடிதடி செய்து வந்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    ஏற்கனவே இவர்கள் பல முறை கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வெளியே வந்த இவர்கள் இனிமேல் குற்றம் செய்யமாட்டோம். திருந்தி வாழ்வோம் என்று எழுதி கொடுத்தனர்.

    ஆனால், சமீப காலமாக மீண்டும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் துணை கமி‌ஷனர் சாய் சரண், 2 ரவுடிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ரவுடிகள் மணிகண்டன், இம்மானுவேல் ஆகியோரை கைது செய்தார். பின்னர் குற்றநடைமுறை சட்டப்படி மணிகண்டன் 56 நாட்களும், இம்மானுவேல் 156 நாட்களும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #PuzhalJail
    புழல் ஜெயிலில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் நேற்று மதியம் முதல் திடீரென்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.
    செங்குன்றம்:

    திருவள்ளூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் செல்வகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சேலம் வந்தபோது அவரை கொல்ல முயன்ற வழக்கும் போலீஸ் பக்ருதீன் மீது உள்ளது. புழல் ஜெயிலில் தனி அறையில் போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டுள்ளார். புழல் ஜெயிலில் போலீஸ் பக்ருதீன் அறையில் இருந்த டி.வி., ரேடியோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் தன்னை அச்சுறுத்துவதாகவும் புகார் கூறி வந்தார். இதை கண்டித்து போலீஸ் பக்ருதீன் நேற்று மதியம் முதல் புழல் ஜெயிலில் திடீரென்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

    ×