search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
    X

    புழல் ஜெயிலில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

    புழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    மாதவரம்:

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கைதியிடம் மீண்டும் செல்போன் சிக்கி உள்ளது.

    புழல் ஜெயிலில் நேற்று காலை ஜெயிலர் உதய குமார் மற்றும் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதான நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யாவின் அறையில் செல்போன் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி? ஜெயில் ஊழியர்கள் உதவினார்களா? யார்-யாருடன் பேசி உள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #PuzhalJail
    Next Story
    ×