search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puzhal jail prisoner"

    புழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    மாதவரம்:

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கைதியிடம் மீண்டும் செல்போன் சிக்கி உள்ளது.

    புழல் ஜெயிலில் நேற்று காலை ஜெயிலர் உதய குமார் மற்றும் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதான நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யாவின் அறையில் செல்போன் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி? ஜெயில் ஊழியர்கள் உதவினார்களா? யார்-யாருடன் பேசி உள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #PuzhalJail
    புழல் சிறையில் கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல என்று ஜெயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #PuzhalJail
    சென்னை:

    புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளியானது.

    இதையடுத்து ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டி.வி.க்கள், செல்போன், மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் தலைமை வார்டன்களும் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்றும், அவற்றை கைதிகள் சாப்பிடுவது  போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.


    புழல் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய பிறகும் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    கைதிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரியாணி மற்றும் சிகரெட் உள்ளிட்டவைக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு தருவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ குறித்து ஜெயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

    சிறைத்துறை நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ரம்ஜான் பண்டிகை சமயத்தில் சிறைத்துறை விதியின்படி முஸ்லிம் கைதிகளுக்காக அவர்களது உணவை தயாரிக்க அனுமதிக்கப்பட்டது.

    உணவு பொருட்கள் வெளியில் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகையின்போது கைதிகள் நோன்பு இருக்கவும், சிறைக்குள் பிரியாணியை தயாரித்து கொள்ளவும் இந்த ஆண்டும் அனுமதி அளிக்கப்பட்து என்றனர். #PuzhalJail
    ×