search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஜெயிலில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் திடீர் உண்ணாவிரதம்
    X

    புழல் ஜெயிலில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் திடீர் உண்ணாவிரதம்

    புழல் ஜெயிலில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் நேற்று மதியம் முதல் திடீரென்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.
    செங்குன்றம்:

    திருவள்ளூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் செல்வகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சேலம் வந்தபோது அவரை கொல்ல முயன்ற வழக்கும் போலீஸ் பக்ருதீன் மீது உள்ளது. புழல் ஜெயிலில் தனி அறையில் போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டுள்ளார். புழல் ஜெயிலில் போலீஸ் பக்ருதீன் அறையில் இருந்த டி.வி., ரேடியோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் தன்னை அச்சுறுத்துவதாகவும் புகார் கூறி வந்தார். இதை கண்டித்து போலீஸ் பக்ருதீன் நேற்று மதியம் முதல் புழல் ஜெயிலில் திடீரென்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

    Next Story
    ×