search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thung Law"

    காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சஜின்குமார்(24) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் சஜின்குமாரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது24). இவர் மீது தக்கலை, திருவட்டார், இரணியல் போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.

    பிரசாத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சஜின்குமார்(24) இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் சஜின்குமாரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    நேற்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
    போரூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    போரூர்:

    எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.

    இந்த நிலையில் கடந்த மாதம் எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியில் பதுங்கி இருந்த முன்டகுட்டியை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    முன்டகுட்டி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எம்ஜிஆர் நகர் போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று முன்டகுட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    மேலும் தலைமறைவு குற்றவாளிகளையும் பிடிக்க தனிப்படைகளும் அமைத்திருந்தார். தொடர் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் அறிவுறுத்தி இருந்தார்.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் 52 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் குற்றவாளிகள் பலர் வெளியிடங்களுக்கு சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்டம் குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த ஆனந்தமுருகன் (வயது 28). இவர் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தது. தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், ஆனந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் பரிந்துரைத்தார். அதன்படி அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதைதொடர்ந்து ஆனந்தை இன்ஸ்பெக்டர் சுதேசன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைத்தார்.

    ஆனந்த் கைது செய்யப்பட்டதை அடுத்து குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து உள்ளது.
    ராக்கெட் ராஜா மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #RocketRaja
    மதுரை:

    நெல்லையை சேர்ந்த ராக்கெட் ராஜா கடந்த மே மாதம் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராஜா என்ற ராக்கெட் ராஜா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், சென்னை தேனாம்பேட்டை போலீசார் கடந்த மே 9-ந்தேதி என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். என்னை சிறையில் அடைத்ததை எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.

    அதன் பிறகு கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர். இந்த நிலையில் ஜூன் 9-ந்தேதி என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்தனர். முறையான ஆவணங்கள் இன்றி விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்து நெல்லை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    குண்டாஸ் வழக்கு பதிவு தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது பதிவு செய்யப்பட்ட குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராக்கெட் ராஜா மீது பதிந்த குண்டாஸ் உத்தரவில் ஏற்பட்ட காலதாமதத்தை கருத்தில் கொண்டு குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து நெல்லை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். #RocketRaja
    கடலூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைதானார்.
    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டித்து அவரது கட்சி நிர்வாகிகள பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். கடந்த 10-ந்தேதி கடலூர் கம்மியம்பேட்டை டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    இந்த வழக்கில் கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பாருக்கானை போலீசார் கைது செய்தனர்.

    பாருக்கான் மீது ஏற்கனவே கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணிக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் பாருக்கானை கடலூர் புதுநகர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.#Tamilnews
    ×