என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் 10 மாதத்தில் 42 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்1 Nov 2021 10:34 AM GMT (Updated: 1 Nov 2021 10:34 AM GMT)
காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சஜின்குமார்(24) இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் சஜின்குமாரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது24). இவர் மீது தக்கலை, திருவட்டார், இரணியல் போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.
பிரசாத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சஜின்குமார்(24) இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் சஜின்குமாரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். சாமியார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது24). இவர் மீது தக்கலை, திருவட்டார், இரணியல் போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.
பிரசாத் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் சஜின்குமார்(24) இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் சஜின்குமாரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X