search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Production"

    • ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி ஆய்வு.
    • ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கடினல்வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும், ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி பாப்பிரெட்டி குத்தகை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 255.21 லட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் தெற்கு முட்டகம் வரை ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டிலும், தென்னடார் ஊராட்சியில் மேலக்காடு சாலை ரூ. 49.80 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் புஷ்பவனம் ஊராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், வாய்மேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15-வது மான்ய நிதியின் கீழ் ரூ. 42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.68.80 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜீ, பாஸ்கர் குஜாரத் கெமிக்கல் லிமிடெட் மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

    • பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து, பாத்திகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.

    உப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக இந்த ஆண்டு உப்பு பாத்திகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் மழையால் பாதித்தது.

    உப்பு எடுக்கும் தருவாயில் திடீரென பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

    பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    எனவே மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், உப்பள தொழிலாளர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலத்தில் செவ்வாய்பேட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
    • பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, மணியனூர், தாதகாப்பட்டி, லைன்மேடு, கொண்டலாம்பட்டி, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகத்தான்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப் பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் கால் கொலுசுகள், அரைஞாண் கயிறு, சந்தன கிண்ணம், குங்குமச் சிமிழ், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட பல்வேறு வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக வட மாநிலங்களில் சேலம் வெள்ளிப் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. ஏனென்றால் சேலத்தில் தயார் செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் சீக்கிரம் கருக்காது என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் மனதில் தனி நம்பிக்கை உள்ளது.

    பொங்கல் பண்டிகை வருகிற 15- ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெள்ளி வியாபாரிகள்,சேலம் வெள்ளி வியாபாரிகளிடம் கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களுக்கு ஆர்டர்கள் தந்து வருகின்றனர்.

    பொங்கலையொட்டி ஆர்டர்கள் அதிகரித்து வருவதால், சேலம் வெள்ளி மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறது.தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.

    இது குறித்து வெள்ளி வியாபாரிகள் கூறுகையில், "ஒவ்வோர் வருடமும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா மாநில வெள்ளி வியாபாரிகளும் சேலம் வெள்ளிவியாபாரிகளிடம் ஆர்டர்கள் தருவது வழக்கம் ஆகும். இந்த வருடம் பொங்கல் பண்டிகை, தை, மாசி மாதங்களில் அடுத்தடுத்து திருமண முகூர்த்த தினங்கள் வருவதால், கொலுசுகள் உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக 'லைட் வெயிட்' எனப்படும் எடை குறைவாக உள்ள கொலுசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அந்த மாடல் கொலுசுகளை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறோம். கால்கொலுசுகளுக்கு அடுத்தப்படியாக அரைஞாண் கயிறு, டம்ளர்கள் உள்ளிட்டவை அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளிக்கட்டி ரூ.66 ஆயிரத்துக்கு விற்றது. கடந்த ஓராண்டாக தங்கம் , வெள்ளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

    விலை உயர்வு இருந்த போதிலும், பொங்கல் பண்டிகை ஆர்டர்கள் அதிகளவில் வருவதன் காரணமாக, வெள்ளிப் பட்டறைகளில் உற்பத்தி மற்றும் வேலை நேரத்தை அதிகப்படுத்தி உள்ளோம். உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்களை அந்தந்த பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறோம். பொங்கலுக்கு முந்தைய நாள் வரை இந்த வேலைகள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தாங்களாக வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பெருக்கும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் வகையில் உயர்தரமான அச்சு வெல்லம் தயாரிப்பு மையங்கள் அமைத்துக் கொள்ளலாம்.இதில் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் அல்லது திட்ட அறிக்கையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 10 அச்சு வெல்லம் தயாரிக்கும் மையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    எனவே அச்சு வெல்லம் உற்பத்தி மையம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்கள், போட்டோ, ஆதார் அட்டை, நிலச்சிட்டா மற்றும் கரும்பு சாகுபடி செய்வதற்கான இடப் பற்றிய விவரம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கடன், ஒப்படைப்பு கடிதம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 75488 16636, 86875 40709, 99979 45711, 8610 752985 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
    • மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 500 மெட்ரிக் டன் அளவு குப்பை கழிவுகள் சேகரமாகிறது. மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் காய்கறி கழிவுகள் மூலம் நுண் உரம் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    காய்கறி கழிவு உள்ளிட்ட மக்கும் கழிவுகளை மாற்று சக்தியாக மாற்றி பயன்படுத்த 12 ஆண்டுக்கு முன் தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் காய்கறி கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் துவங்கியது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது வெற்றி பெறுவதில் சிக்கல் இருந்த நிலையில், கைவிடப்பட்டது.

    இதனால் பயோ- கியாஸ் உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக 1.60 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றது.மேலும் சில மாறுதல்கள் செய்து, இங்கு உற்பத்தியாகும் பயோ கியாசை சிலிண்டர்களில் நிரப்பி, அம்மா உணவகம் மற்றும் மாநகராட்சி சத்துணவு மையங்களில் பயன்படுத்த முடிவானது. ஆனாலும் மையம் முழுமையாக இயக்கப்படாமல் வீணானது. ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சத்தமின்றி விலகியது.

    இவ்வாறு பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இம்மையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில், நவீன தொழில்நுட்பத்தில் புதிய கருவிகள் பொருத்தி சி.என்.ஜி., கியாஸ் உற்பத்தி துவங்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான குறிப்பிட்ட அளவிலான வாகனங்கள் இந்த கியாஸ் மூலம் இயக்கப்படும். இதனால் கிடப்பில் உள்ள மையம் செயல்படுவதோடு கணிசமான அளவு வாகன எரிபொருள் மீதமாகும் என்றார்.

    தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பசுமை ஆலயம் திட்டம் தயாரித்துள்ளது. கோவில்களில் சேகரமாகும் மக்கும் குப்பையை உரமாக்கி நந்தவனங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவில்களில் உள்ள கோசாலை மாடுகளின் கழிவுகள், அன்னதான கூட கழிவு, பூமாலை, துளசி, தோட்ட கழிவு, காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளை கொண்டு, மக்கும் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பையை தனியே சேகரித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் பசுமை ஆலயம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் இணை கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இணை கமிஷனர் குமாரதுரை தலைமை வகித்தார். மாவட்டத்தை சேர்ந்த உதவி கமிஷனர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ஐ.டி.சி., நிறுவனம், ஆர்.டி.ஓ., டிரஸ்ட், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் நிறுவனத்தினர் பங்கேற்று பசுமை ஆலய திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினர். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், பசுமை ஆலயம் திட்டம் செயல்படுத்தப்படுமென இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

    • குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.
    • நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், திருக்கண்ணபுரம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஏ.டி.டி., கோ - 45, கோ - 51, பி.பி.டி., (ஆந்திரா பொன்னி) நெல் சாகுபடி செய்தனர்.

    அதில் பெரும்பாலான நிலங்களில் நெற்பயிர்களில் ஆணை கொம்பன் நோய், இலை சுருட்டு புழு, குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:-

    கடந்த சில ஆண்டுக்கு முன்னர் நெற்பயிர்களில் கதிர் வரும் சமயத்தில் ஆணை கொம்பன் நோய் பரவியது.

    இதனால், பயிர்களில் கதிர் வராமல், நெல் உற்பத்தி குறைந்து விட்டது. நடப்பாண்டு சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களில், இந்நோய் அறிகுறி காணப்படுகிறது.

    அதை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

    நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தான் ஆணை கொம்பன் புழு தாக்குதல் அதிகமாக உள்ளதால் இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லை.
    • பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணிசூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் கோடி யக்காட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் உப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் பணிச்சூழல், பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகிய குறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    இதுகுறித்து மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-

    உப்பள தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
    • இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் சர்வதேச பின்னலாடை கண்காட்சிதொடங்கியது. இந்த கண்காட்சி குறித்து திருப்பூர் அனைத்து ஏற்றுமதி வர்த்தக அமைப்பின் தலைவர் இளங்கோவன் கூறும்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் பேர் வெளிநாட்டு வர்த்தக முகமைகளின் (பையிங் ஏஜென்சி) மூலமாக வர்த்தகம் செய்கிறார்கள். பெரும்பாலான ஏற்றுமதியாளருக்கு நேரடி வர்த்தகம் செய்யும் அளவுக்கு சர்வதேச சந்தை விவரம் முழுமையாக தெரியவில்லை. உற்பத்தியை தரமாக மேற்கொண்டாலும், மார்க்கெட்டிங் தொழில் திறன் குறைவு. வர்த்தக முகமைகளை அவர்கள் சார்ந்துள்ளனர். புதிய வாய்ப்புகளை உருவாக்க வர்த்தக முகமைகளுடன் கைகோர்த்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அனைவரும் இணைந்து 'பிராண்ட் திருப்பூர்' என்பதை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரக்கொள்கையை பின்பற்றி 'பிராண்ட் திருப்பூர்' என்ற பெயரில் புதிய பிராண்ட் உருவாக்கப்படும்' என்றார்.

    டெல்லியை சேர்ந்த வர்த்தக முகமை அமைப்பின் ரோகிணி சூரி கூறும்போது, 'வர்த்தக முகமையுடன் இணைந்து கண்காட்சி நடக்கிறது. புதிய வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் மார்க்கெட்டிங் முக்கியம். சரியான சந்தைப்படுத்துதல் அமைந்துவிட்டால் வெற்றி எளிதில் கிடைக்கும். அதற்கு வர்த்தக முகமைகள் உதவ முன்வந்துள்ளன என்றார்.

    டெல்லி வர்த்தக முகவர் சஞ்சய் சுக்லா கூறும்போது, சாதகமான சூழல் நிலவுவதால் தற்போதைய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள், சார்பு நிறுவனங்கள், செலவினங்களை குறைத்து உற்பத்தியை பெருக்க வேண்டும். உற்பத்திக்கு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டத்தில் அரசு சலுகைகளை பெற்று மதிப்புக்கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

    நிப்ட் முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் ரோகித் கூறும்போது, திருப்பூர் நகரம் 35 கிலோ மீட்டர் சுற்றளவில் பனியன் தொழில்களை நடத்தி வருகிறது. சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து ஆர்டர்கள் திருப்பூருக்கு வரப்போகிறது. வெளிநாட்டு வர்த்தகர்களுடன் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    கைத்தறி ஆடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி அமைப்பின் தலைவர் அஜய் அகர்வால் கூறும்போது, 'பின்னலாடைத்துறையில் இந்தியாவின் போட்டி நாடுகளில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நிறுவனங்கள், சீனாவில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளன. போட்டி நாடுகளுக்கான ஆர்டர் இந்தியாவுக்கு கிடைக்கும். இந்தியாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றார்.

    • மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
    • பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணி வேதாந்தம் திடலில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் "இடப்பங்கீடு எமது உரிமை விழிப்புணர்வு மாநாடு" நடைபெற்றது.

    மாநாட்டிற்கு மாநில கொள்கை பரப்பு செயலாளர் தஞ்சை சாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் தஞ்சை முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாரதி சதீஷ் வரவேற்றார்.

    வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்துசிறப்புரை ஆற்றினார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முத்த ரையர்களுக்கு இடப்பங்கீடு வேண்டும்.

    அதில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் தனிப்பங்கீடு வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசினார்.

    இந்த கூட்டத்தில், பேராவூ ரணி பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் இருப்பதால் அரசு கயிறு தொழிற்சாலை மற்றும் கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்படுத்த வேண்டும்.

    மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். பேராவூரணி பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரம் காக்க தங்கு கடல் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    மீனவர்களுக்கு உற்பத்தி விலைக்கு டீசல் வழங்க வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அவசர சிகிச்சை பிரிவு தொடங்கிட வேண்டும்.

    இரவு நேரங்களில் கூடுதல் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்ப–தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம்வி ளங்குகிறது.

    அரசு இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

    இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து சுற்றுச்சூழலுக்கு எவ்வகையிலும் மாசு ஏற்படுத்தாத நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.

    மேலும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    இது முதல்-அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.

    எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும். தொழில்முனைவோரும்

    வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி- துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், No:30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ், முதல் தளம், தாந்தோணிமலை கரூர் - 639005. கைபேசி எண்: 9444656445, 9092590486.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
    • தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர்வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும்.

    1949-ம் ஆண்டு தொடக்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    அதன்படி தஞ்சாவூர் கிளை அலுவலகத்தில் (No.2854, NGK அபார்ட்மெண்ட், நாஞ்சிக்கோட்டை ரோடு பழைய அருள் தியேட்டர் எதிரில், தஞ்சாவூர்- 613001) குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.

    இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் தகவலுக்கு 04362- 274230, 230465 / 9789610260, 9442540854 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது.
    • 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    சேலம்:

    சேலத்தில் கரும்புச் சாறினால் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், ஓமலூர், நாலுகால்பாலம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர், தும்பல், டேனிஸ்பேட்டை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல இடங்களுக்கும் தவிர இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆடி மாதத்தையொட்டி வெல்லம்அதிகளவில் தேவைப்பட்டதால் கடந்த 6 மாதங்களில் ஜூன், ஜூலை வழக்கத்தைவிட வெல்லம் உற்பத்தியை அதிகப்படுத்தினர்.

    உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் அவ்வப் போது விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆடிப்பண்டிகையை தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியும், செப்டம்பர் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கி, அக்டோபர் 4-ந் தேதி ஆயுதபூஜை விழாவும் நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

    சேலம் மாவட்டத்தில் கருப்பூர்,ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தினசரி 50 முதல் 60 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுக்க சேலம் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகை தருகின்றனர்.தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளோம்.

    தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. மண்டியில் 30 டன் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் வெல்லம் 60 சதவீதம் பெங்களூருக்கும், மீதமுள்ள 40 சதவீதம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் (1250 முதல்1350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

    ×