search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுகள்"

    • வீடுகளில் உள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருவதால்பொதுமக்கள் அவதி
    • சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு

    பீளமேடு,

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தால், நகர் மேம்பாட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட நகரம் தான் கோவை காந்திமாநகர். இங்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இங்கு கோவை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளில் இரு ந்து வரும் கழிவு நீர்கள் காந்தி மாநகர் பகுதியில் கிழக்கு புறமாக அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தேக்கி வைக்கப்படுகிறது.

    அங்கிருந்து சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு சிறு ஓடைகளில் விடப்படுவது வாடிக்கை. இதனால் அந்தப் பகுதியில் எந்தவித கழிவுநீர் பிரச்சினைகளும் இல்லாமல் இருந்தது.

    ஆனால் கடந்த 3 வருடங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின் மோட்டார் செயல்படாத தால் அருகில் உள்ள பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி குளம் போல காணப்படுகிறது.

    இதனால் கிழக்குபுறம் பல வீடுகளில் உ ள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருகிறது. குடியிருப்பு வாசிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிக்கு ள்ளாகிறார்கள்.

    குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. அதற்கு மாறாக அடைப்பு ஏற்பட்டதாக தகவல் கொடுத்தால், கழிவு நீர் வாகனம் வந்து சம்பந்தப்பட்ட வீடுகளில் உள்ள அடைப்புகளை சரி செய்து வருகின்றனர். இது தற்காலிக தீர்வாகவே அமைகிறது.

    இதுகுறித்து காந்தி மாநகரில் வசிப்பவர்கள் கூறியதாவது:-

    கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தேக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுவதில்லை. சுத்திகரிப்பதற்கான மின் மோட்டார் இன்று வரை இயங்குவதுமில்லை. அதற்கு தனியாக மாநக ராட்சி ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை.

    இங்கு தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் திடீரென குடியிருப்பு பகுதியில் புகுந்து அடைப்புகள் ஏற்படுகிறது. இதனால் பெரும் அவதியடைகிறோம்.

    கழிவு நீரை அகற்றுவதற்கு சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் ஆயிரக்கணக்கில் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இத னால் பெருமளவில் குடியிருப்பு வாசிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர்.

    இந்த பாதாள சாக்கடை கழிவு நீரை உடனுக்குடன் மறுசுழற்சி செய்து முறைப்படி அகற்றினால் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். அதற்கு இந்தப் பகுதி கவுன்சிலர், மாநகராட்சி மேயர், கோவை மாநகர ஆணையாளர் உட்பட அனைவரும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

    • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து இறைச்சி, மீன், மருத்துவ கழிவு உள்பட பல கழிவு பொருட்களை லாரியில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள்.

    இதை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்த போதும் கழிவுகளை தொடர்ந்து கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் சுற்று வட்டார பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகளை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    • நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக் டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு உள்ள இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள், பொதுகால்வாயில் கொட்டப்பட்டு வருகின்றன.

    இதனால் அங்கு ஈக்கள் மொய்த்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பு கேட்டுக் கொண்டு உள்ளது.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
    • கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது.

    கோபி,

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழி வுகள் சேகரம் செய்யப்ப டுகிறது. இதில் 9 டன் மக்கும் கழிவுகளை இயந்திர த்தில் அரைத்து தொட்டி களில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவ ற்றை குறைந்த விலைக்கு விவசாயி களுக்கு வழங்க ப்படுகிறது. 3 டன் அதிக ஈரப்பதம் உள்ள உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொண்டு மின் சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தைக் கொ ண்டு இயந்திரங்கள் இயக்க ப்படுகிறது. மக்காத மறுசுழ ற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகி ன்றனர்.

    மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பேப்ப ர்கள் போன்றவற்றை மா ற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்படுகிறது. தற்போது 12 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க ப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 3 ஆயிரத்து 250 டன் பிளா ஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனு ப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

    • குப்பை கொட்டும் நிலையமாக மாறிய வைகை தென்கரை பகுதி உள்ளது.
    • கால்நடை கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகிறது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது காற்றில் பறக்கும் உத்தரவாகவே மாறிவிட்டது.

    இதனை அதிகாரிகள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டு கண்டு–கொள்ளாததால் ஆறுகளும், குளங்களும் குப்பை கொட் டும் இடமாக மாறிவிட்டது.

    அதிலும் சமீப காலமாக வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை யாருக்கும் தெரி–யாமல் இரவு, பகல் என்று பாராமல் ஆறுகளிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான சாக்கடைகளில் கலந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுத்து சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் பல–னில்லை.

    இதற்கிடையே கோவில் மாநகரமான மதுரையிலும் இதுபோன்ற கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறி வரு–கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநா–தபுரம் ஆகிய 6 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமா–கவும், விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்ப–டுத்தப்படுகிறது. ஆனால் இந்த ஆற்றில் அதிக அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டு அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் கால் நடை வளர்ப்போர் ஏராள–மாக வசித்து வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளுக் கென்று தனியாக தங்களது சொந்த இடத்தில் கொட் டகை அமைத்து பராமரிக் காமல் சாலைகளில் சுற்றித் திரிய விட்டுள்ளனர்.

    அவை இரவு, பகல் பாராமல் சாலைகளின் ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை உண்டும், படுத்து உறங்கியும் போக்கு–வரத்துக்கு இடையூறு அளித்து வருகிறது. திடீ–ரென்று அந்த கால்நடைகள் மூர்க்கத்தனமாக சாலை–களில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்து–டனேயே அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது.

    இவை அனைத்தையும் மீறி வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் மாடு–களை கட்டி வைத்து பராம–ரிக்கும் கால்நடை வளர்ப் போர் அதன் கழிவுகளை அப்பறப்படுத்தாமல் அங் ேகயே விட்டுச்செல்வ–தும், பல நேரங்களில் வைகை ஆற்றில் கொட்டி விடுவதும் வாடிக்கையாகி விட்டது. பல்வேறு வரலாற்று சிறப் புகளை கொண்ட வைகை ஆறு இன்று குப்பை கழிவு–களை கொட்டும் இடமாக மாறிவருவது பொது–மக் களை வெறுப்படைய செய் துள்ளது.

    சித்திரை திருவிழா நடை–பெறும் காலங்களில் மட்டும் வைகை ஆற்றை போற்றி பாதுகாத்தால் போதாது, காலம் முழுக்க அதனை சுத்தமாகவும், சுகாதார–மாகவும் வைத்துக்ெகாள்ள முயற்சிக்க வேண்டும். ஏற்கனவே கால் நடை வளர்ப்போர் தென் கரை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கக்கூடாது என்றும், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.

    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் தங்களுடைய செயல்பாடு–களை கால்நடை வளர்ப் போர் தொடர்ந்து வரு–கின்றனர். அதேபோல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும் பறிமுதல் செய்து, அதனை வளர்ப்போ–ருக்கு அபராதம் விதிப்பதை–யும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண் டும் என்பதும் ஒட்டுமொத்த மதுரை மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவுபடி வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றது,

    உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.

    கடற்கரை மற்றும் கடற்க ரைக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பி னர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கடற்க ரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது.

    • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
    • காய்கறிகள், பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது

    உடுமலை :

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகள் வரத்தும் அதிக அளவில் இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் கழிவுகளும் சேர்ந்து வருகிறது. அதை முறையாக அகற்றாமல் சந்தை வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள்,பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்றாட உணவில் காய்கறிகள் கீரைகளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போது வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக உள்ளதால் காய்கறிகள், கீரைகள் விரைவில் வாடி விடுகின்றது. இதனால் நாள்தோறும் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றோம். ஆனால் காய்கறி கழிவுகளை அகற்றாமல் சந்தை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் குவித்து வைத்து உள்ளனர். அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சந்தையின் ஒரு பகுதியில் விவசாயிகள் கடை அமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் முழுமையான அளவில் காய்கறிகளை வாங்க முடிவதில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் சந்தையில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.

    எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் நாள்தோறும் சந்தையில் சேகரமாகும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது.
    • மரபுசாரா கழிவுகளை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூபதி ராஜா, செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில்பாபநாசம் பேரூராட்சியில் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுவது எனவும், திருப்பாலைத்துறை உரக்கிடங்கில் நீண்ட காலமாக தேங்கியுள்ள மரபுசாரா கழிவுகளை ரூ 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது எனவும்,

    ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது எனவும், பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் இயங்கி வரும் மதுபான கடை பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதால் பாபநாசம் வடக்கு வீதியில் மயானம் அருகில் மாற்றுவது எனவும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், கோட்டையம்மாள், கெஜலட்சுமி, விஜயா, பிரகாஷ், பாலகிருஷ்ணன். சமீரா பர்வீன், புஷ்பா சக்திவேல், ஜாபர் அலி, முத்துமேரி மைக்கேல் ராஜ், தேன்மொழி உதயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வெண்ணத்தூர் ஊராட்சி சம்பை கிராம பகுதியில் நெடுஞ்சாலையோரம் கெமிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அதனால் துர்நாற்றம் வீசுகிறது என ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா உடையநாயகம் தலைமையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் முறையிட்டனர். கிராம பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என்றும், கடலோரப்பகுதியாக உள்ளதால் உப்புநீர் தான் நிலத்தடியில் உள்ளது. ஆகையால் நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

    சம்பை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமுக்கு வந்த கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • துர்நாற்றம், கொசு உற்பத்தி என கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலை குட்டைத்திடல் பகுதியில், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான குட்டைத்திடல் பகுதி போதிய பராமரிப்பு இன்றி அமைந்துள்ளதால் குப்பை, கட்டட கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் நாராயண கவி மணி மண்டம், காந்திசிலை, முதற்கிளை நூலகம் அமைந்துள்ள நிலையில் இங்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே, குட்டைத்திடலில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது.
    • இறைச்சிகழிவுகள், இறந்த விலங்கினங்கள், நெகிழி பொருட்கள் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம்,கோபாலசமுத்திரம் ஊராட்சிகளில் 20கிராமங்களின் சேகரிக்கப்படும் ஊராட்சி குப்பைகள்,கழிவுகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு நீர்நிலை மாசுஏற்பட்டுவந்தது.

    மேலும் அப்பகுதியில் பெரும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் நிலவியது.

    நீர்நிலை பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு வழக்குரைஞர் அறிவிப்பானையை ஊராட்சி ஒன்றியத்திற்கு அனுப்பினார்.

    அதன்பின்னர் நீர்நிலை அருகே குப்பைகள் கொட்டக்கூடாது என நீர்வளஆதாரத்துறையினர் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டாலும், 2ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குப்பைகளை மக்கும்குப்பை,மக்காத குப்பை என தரம்பிரித்து எடுத்து சென்று கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யாமல் பொதுமக்கள் கூடும் இடங்கள்,குடியிருப்புகள்,பள்ளிகள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.

    குப்பைகளுடன் இறைச்சிகழிவுகள்,இறந்த விலங்கினங்கள்,நெகிழி பொருட்களும் கொட்டப்பட்டுவதால் கடும் துர்நாற்றம்,சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுவருகிறது. ஆகையால் இரண்டு ஊராட்சிகளிலும் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை குவித்து வைக்காமல் மாற்று இடம் தேர்வு செய்து தரம்பிரித்து கொட்டிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்ளிடம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் இராம.பிரபு ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளருக்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

    • ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர்.
    • கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கொமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.மேலும் கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றில் சடங்குகள், செய்ய, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசிவிடுகின்றனர். இதனால் தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது.ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில் ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×