search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடனுதவி"

    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியாக பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிதாக கறவை மாடு வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிளையில் முதல் கட்டமாக சுமார் பத்து நபர்களை தேர்வு செய்து நபர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கும் கடன் முயற்சியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வந்தார்.

    அதன் அடிப்படையில் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர் அஞ்சு, துணைத் தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி,வார்டு உறுப்பினர்கள்,பொன்னமராவதி வி. என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தள்ளுவண்டி கடை திறப்பு விழாவில் கோட்டாட்சியர் பங்கேற்பு
    • மற்ற திருநங்கைகளுக்கும் உதவ வேண்டும் என கோரிக்கை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர், ஓட்டுபட்டறை பகுதியை சேர்ந்த திருநங்கை லட்சுமி, சுயதொழில் ஆரம்பிக்க கடனுதவி கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். தொடர்ந்து அவருக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் சார்பில், ரூ.50 ஆயிரம் மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டது.

    இதன்மூலம் அவர் தற்போது தள்ளுவண்டியில் சுயதொழில் தொடங்கி நடத்தி வருகிறார்.முன்னதாக திருநங்கையின் தள்ளுவண்டி கடை திறப்பு விழாவில் குன்னூர் கோட்டாட்சியர் பூசனகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து திருநங்கை லட்சுமி கூறியதாவது:-

    எனக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. எனவே நான் அரசிடம் கடனுதவி கோரி விண்ணப்பித்தேன். அவர்கள் என் மனுவை பரிசீலித்து முதன்முறையாக மானியத்துடன் கடனுதவி வழங்கினர்.

    இதன்மூலம் நான் தள்ளுவண்டி கடையை துவங்கி நடத்தி வருகிறேன்.திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுத்து அரசு உதவி செய்தது மகிழ்ச்சி தருகிறது.நீலகிரி மாவட்டத்தில் திருநங்கைகள் அதிகளவில் உள்ளனர். எனவே அவர்களுக்கும் சுயதொழில் துவங்க அரசு தேவையான ஆலோசனைகள் மட்டுமின்றி மானியத்துடன் கடனுதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் அருகே பழங்குடியினருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டது.
    • பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் பில்டர்காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங்மென் பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.

    இத்தொழிலை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோ சனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவி டர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும், பழங்குடி யினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உழவர் கடன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையால் சிறப்பு முகாம் நாடு முழுவதும் 01-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசா யிகள் இம்முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7% வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயி கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாகத் தவணை மாறாமல் திரும்பச் செலுத்தினால் 3% வரை வட்டி மானியம் பெறலாம். உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 இலட்சம் வரை எவ்விதப் பிணையமும் இன்றிக் கடன் வழங்கப்படும்.உழவர் கடன் அட்டை மூலம் கடன் பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்கள் (பட்டா/சிட்டா, அடங்கல்) ஆதார் அட்டை (கட்டாயம்), பான் அட்டை இவற்றுடன் குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கிக் கிளைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

    • அரியலூரில் 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தாட்கோ திட்டம் , மகளிர் திட்டம் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அரசு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வங்கி கிளையில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை வங்கி மேலாளர்களின் மூலம் பரிசீலினைச் செய்யப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு கடன் ஆணையும், பட்டுவாடா ஆணையும் வழங்கப்பட்டது. இம்முகாமில் பயிர்கடன், தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கால்நடை பராமரிப்பு கடன், கல்விக்கடன், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி கடன் உதவிக்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம், அரியலூர் மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி போன்ற வங்கி கிளை மேலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் லட்சுமி, முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லாயனல் பேனிடிக்ட், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்வி கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

    மாணவர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, கலெக்டர் ஆஷா அஜித், கார்த்தி சிதம்பரம் எம்.பி., வழங்கினர்.

    பி்ன்னர் கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 2 சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த 5-ந்தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 39 மாணவர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பில்கடன் ஆணைகள் வழங்கப்பட்டது.37 மாணவர்களுக்கு ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப் பம் பெறப்பட்டது.

    காரைக்குடி சிறப்பு முகாமில் 65 மா ணவர்களுக்கு ரூ.6.59 கோடி மதிப்பில் கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34 மாணவர்கள் ரூ.் 1.73 கோடி மதிப்பில் புதிய கல்வி கடனுதவி பெற, விண்ணப்பித்துள் ளனர்.

    மொத்தமாக 104 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்துள்ள 71 மாணவர்களின் விண்ணப்பங்கள் மீது கடன் அனுமதி உத்தரவு கள் 2 வாரங்களில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்று பேசினார்.
    • முடிவில் பாஸ்கர் நன்றி கூறினார்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு

    நிறுவனத்தில் கல்யாணபுரம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம், கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனம் இணைந்து மகளிருக்கான கறவை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

    துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் செயல்பட்டு வரும் வினோபாஜி உழவர் உற்ப த்தியாளர் நிறுவனத்தைச் சார்ந்த

    பெண் விவசாயிகள் 231 நபர்களுக்கு தஞ்சை மாவட்ட தொழில் மையம் மானிய உதவியுடனும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கல்யாணபுரம் கிளையின் வாயிலாக ரூ.2.31 கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கி பேசினார் .

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ், தஞ்சை மாவட்ட நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் அனீஸ்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சை மாவட்ட உதவி பொது செயலாளர் சக்கரவர்த்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலு வலக விவசாய அதிகாரி அஸ்வத்ராமன், விவசாய முதன்மை அதிகாரி பிரியதர்ஷினி, கல்யாணபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முதன்மை மேலாளர் கற்பகவிநாயகம், சர்டோனிக்ஸ் கம்பெனியின் திட்ட அலுவலர் குலோத்துங்கன், இயக்குனர் கனி உள்ளிட்ட பலர் பேசினர்.

    கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியினை கவ்டெசி நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை வங்கி அலுவலக பணியாளர்கள் மற்றும் கவ்டெசி நிறுவன பணியாளர்கள் கோமதி, சுபாஷினி, கனேஷ்வரி, ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

    முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • 502 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
    • தஞ்சாவூர் பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு செயலர் ஜெகந்நாதன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி, நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி மற்றும் திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 502 பயனாளிகளுக்கு ரூ.3.42 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் பெரியசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியர் பழனீஸ்வரி, தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் அப்துல் மஜீத், பட்டுக்கோட்டை சரக துணைப்பதிவாளர் சுவாமிநாதன், தஞ்சாவூர் பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்.
    • மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் சுய உதவி குழுக்கள், மாற்றத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 கோடி 32 லட்சம் கடன் வழங்கினார். நபார்டு நிதி உதவி கீழ் வழி சோதனை பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ. 6.50 லட்ச மதிப்பில் சரக்கு வாகனம் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதியதாக துவக்கப்பட உள்ள வண்டிப்பாளையம் கிளையினை ஆய்வு செய்தார். மேலும் கடலூர் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார், துணைப் பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், அன்பரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அலுவலர் எழில்பாரதி மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது
    • சுய உதவிக் குழுக்கள் , பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக் குழுக்கள், பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரியலூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் மூலமாக பயிர்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டுக்க டன்(டாப்செட்கோ), சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாம்கோ )ஆதிதிராவிடர் நலக் கடன் (தாட்கோ), கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்கள், இயந்திரங்கள் வாங்க (டாம்கோ), சுயஉதவிக்குழு கடன் போன்ற கடன்கள் தனிநபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நபர் ஒருவருக்க வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமான கடன், சுய உதவிக்குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.இந்த திட்டங்களில் கடன் கோரும் பயனாளிகள், தங்கள் ஆதார், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று, ஜாதிச் சான்றிதழ், தொழில் வரி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம்.மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அட்டை சமர்ப்பித்து கடன் பெறலாம். மேலும், கடன் பெறுவது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • 123 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை முதலான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • கூட்டுறவு சங்க 3 உறுப்பினர்களுக்கு தலா ரூ. 80 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் நாகரசம்பேட்டையில் கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்லிட் தஞ்சாவூர் (பால்வளத்துறை) மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் கருணாநிதி 100-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கிடாரி கன்றுகளுக்கான பேரணி நடத்தப்பட்டு அவற்றில் சிறந்த 3 கிடாரி கன்றின் உரிமையாளர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து, அதிக பால் உற்பத்தி செய்யும் 3 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இம்முகாமில் 260 கால்நடைகளுக்கான சிகிச்சை, 836 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 32 கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல், 123 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை முதலான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மேலாண்மை முறைகளை விளக்கும் விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தை சார்ந்த பேராசிரியர் ஜெகதீசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    மேலும் 7 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து 108 கறவை மாட்டுக் கடனுக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு 76 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தொடக்கமாக கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க 3 உறுப்பினர்களுக்கு தலா ரூ. 80,000 கடனுதவி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சுப்பையன், ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் கரிஷெட்டி, வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, துணை பதிவாளர் விஜயலட்சுமி, திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகரில் வருகிற 27-ந்தேதி கடனுதவி முகாம் நடக்கிறது.
    • ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.250 கோடியினை குறு-சிறு தொழில் கடனுதவிக்கென இலக்காக நிர்ணயித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகரில் உள்ள தொழில் வர்த்தக சங்க மகாலில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு கடன் வசதி எளிமையாக்கல் முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடை பெற உள்ளது.இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள், மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வேளாண்மை மற்றும் உழவர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கைத்தறி துறை, தாட்கோ, டாப்செட்கோ, டாம்கோ, கதர் கிராம தொழில் ஆணையம், கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்பு களும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற் கொள்ள உள்ளன.புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்க ளும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கி உள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 27-ந்தேதி அன்றே கடனுதவி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வங்கி அமைப்புகளின் இசை வோடு விருதுநகர் மாவட்டத் திற்கென ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.250 கோடியினை குறு-சிறு தொழில் கடனுதவிக்கென இலக்காக நிர்ணயித்துள்ளது.

    எனவே குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானிய கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை நேரிலோ அல்லது 90800 78933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×