search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானியம்"

    • 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.
    • மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆம் நிதியாண்டில் சுய தொழில் தொடங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூ.3 கோடியே 55 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில்தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ,அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி க்குறிப்பில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
    • இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் -641604 என்ற முகவரியையும், 94450 29552, 0421 -297112 என்ற செல்போன், தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
    • சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையில் உள்ள உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி க்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துச்செல்வன் தலைமை தாங்கினார்.

    இதில் தஞ்சை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரும், சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக செயல் ஆட்சியருமான விஜயகுமார், மாவட்ட தொழில் மைய உதவி பொறி யாளர் கார்த்திகேயன், சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்ர மணியம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. பேரூர் துணை செயலாளர் கோபால், சுவாமிமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவ. ராதாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரை குணாளன், ஜெமினி, லட்சுமி பிரியா மற்றும் சம்பத் சுப்பிரமணியன், கோபால் மற்றும் சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோனஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் உள்ளது.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான இடுபொருட்கள் உரங்கள் மானிய விலையில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு மானியம் வந்துள்ளதாகவும், இடுபொருட்களும் கையிருப்பில் உள்ளதாகவும் வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சான்று பெற்ற உளுந்து, சோளம், நிலக்கடலை விதைகளும், விதை கிராமத் திட்டத்தின் கீழ் நெல் விதை 50 சதவீத மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 25 சதவீத உரச் செலவை குறைக்கக்கூடிய ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, துத்தநாக சத்தை கரைத்துக் கொடுக்கும் உயிர் உரங்கள் 50 சதவீத மானியம் போக ரூ. 225-ல் பெற்றுக் கொள்ளலாம். உயிர் பூச்சிக்கொல்லிகள் மெட்டா ரைசியம் சூடோமோனஸ், டிவிரிடி ஆகியவை 50 சதவீத மானியத்தில் உள்ளது.

    எனவே மானிய விலையில் உள்ள நுண்ணூட்டக் கலவைகள் ஒரு கிலோ வீதம் நெல் நுண்ணூட்டம் ரூ. 57.04, கரும்பு நுண்ணூட்டம் ரூ. 64.94, தென்னை நுண்ணூட்டம் ரூ102.54, பயறு நுண்ணூட்டம் ரூ.132.80, சிறுதானிய நுண்ணூட்டம் ரூ.101.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தேக்கு, மகாகனி, சவுக்கு, மலைவேம்பு போன்ற மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு எக்டேர் பரப்பளவில் வேம்பு சாகுபடி செய்ய மானியம் ரூ. 21 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.மேலும் தென்னங்கன்றுகள் நெட்டை குட்டை ரகம் ரூ.125 க்கு விற்பனைக்கு உள்ளது. பேட்டரி தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

    விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் சம்பந்தப்பட்ட பகுதி வேளாண்மை அலுவலரை 9344737991 என்ற எண்ணிலும், துணை வேளாண்மை அலுவலரை 7904087328 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும்.
    • 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மூலனூர்:

    மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மூலனூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக செலவினம் ரூ.2 லட்சம் ஆகும். இதற்கான மானியமாக 50 சதவீதமாக ரூ.1லட்சம் வழங்கப்படுகிறது.

    பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும். எனவே இத்திட்டம் தேவையான விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். செல்:- 96777 76214 மற்றும் 97905 26223. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 100 சதவீத மானியத்தில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் மூலம்நடவு செடிகள் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக தேசிய எண்ணைப்பனை இயக்கத்திட்டத்தின் மூலம் எண்ணைப்பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் எண்ணைப்பனை திட்டத்தின் மூலமாக பாமாயில் மரம்சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிட் இணைந்து பல்வேறு விழிப்பு ணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடி ப்படையில் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாமாயில் சாகுபடி குறித்து விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாகனம் ஒரு வாரத்திற்குபிரச்சார பணி மேற்கொள்ளவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2022-2023 -ம் ஆண்டு முதல்தோட்டக்கலை துறை மூலம் 30.5 எக்டர் பரப்பளவிற்கு 2023-2024 ல் 20 எக்டர் பரப்பிற்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் மூலம்நடவு செடிகள் வழங்கப்பட்டது.

    எண்ணைப்பனை ஒரு எக்டருக்கு 143 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒருமரத்தில் ஒரு வருடத்திற்கு 12 குலைகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு குலையின்சராசரி எடை 25 கிலோ. இதன் மூலம் ஒரு எக்டருக்கு 42.9 டன்கள் பழங்களை அறுவடைவதால் குறைந்தபட்சம் ரூ.5,46,000 வரை வருமானம் ஈட்டலாம். மேலும் இதன்மூலம் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் பெறமுடியும். எனவே விவசாயிகள் மாத வரு மானம் தரும் மகத்தான பாமாயில் மர சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டக்கலை துணை இயக்குநர்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) விஜயரா கவன், தோட்டக்கலை உதவி இயக்குநர் உமா, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் விவாசயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது.
    • ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படும்.

    திருப்பூர்

    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அதன் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள், வேளாண்மைத்துறை மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி ரகம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரகங்களின் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.50 ஆகும். விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படும். எனவே சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கிபயன்பெறலாம்.

    இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

    • 40 சதவீத மானியத்துடன் மீன் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன் விற்பனை அங்காடி அலங்கார மீன் வளர்ப்பு நிலையங்கள் அமைக்கலாம். இந்த திட்டத்தில் 1 அலகுகள் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 60 சதவீத மானியத்துடன் மீன் அங்காடிகள் அமைக்கலாம்.

    மேலும் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்வதற்கு ரூ.7.50 லட்சம் திட்ட மதிப்பீட்டுடன் அமைக்க லாம். இதில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் இந்தத் திட்டம் செயல்ப டுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப் பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 5/3 யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும், 9384824553, 9384824273 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு

    கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் தண்ணீர் குழாய்கள் பெற விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் தோட்டக்கலை துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும்,பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என அறிவி க்கப்பட்டு விண்ணப்பங்கள் பெற ப்பட்டது.விண்ண ப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 400 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீர் குழாய்களை உதவி தோட்ட க்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், சரவண அய்யப்பன் ஆகியோர் வழங்கினர்.

    மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தகுதிக்கு ஏற்ப வாழை,கோவைக்காய் செடி,முள் இல்லா மூங்கில், மூலிகை செடிகள், பூச்செ டிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மான்யத்தில் வழங்கப்பட்டது.

    அப்போது இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பயன்பாடு,மகசூல் அதிகரி ப்பு,களைகள் வளர்வது குறைக்கப்ப டும்,மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.

    மேலும் தண்ணீர் குழாய்கள் தேவைப்படும் சிறு குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் பெற தோட்ட க்கலை அலுவலகத்திற்கு வந்து சிறு குறு விவசாய சான்று,அடங்கல்,நிலத்தின் வரைபடம்,ஆதார் நகல்,தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என கூறினார்.

    மேலும் தகவல்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் 9952329863 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

    • வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் கணினி திறனுடன் இருத்தல் அவசியம்.

    திருப்பூர்:

    வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வங்கிக்கடன் உதவி பெற்று வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    தகுதிகளானது வேளாண்மை , தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் முடித்திருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் அல்லது வங்கி கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

    தேவையான ஆவணங்களாவன 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை ஆகும்.

    2023-24 ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 52 கிராம பஞ்சாயத்துகளில் தொழில் துவங்க விண்ணப்பிக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லதுவேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை துவங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி,வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை, வங்கி கடன்ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும்.

    தங்களின் விரிவான திட்டஅறிக்கையை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர்அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    பரமத்தி வேலூர்Namakkal District News,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும், பயிர்களில் மகசூல் அதிகரிக்கவும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், சிறுதானிய சாகுபடிக்கான நுண்ணூட்டங்கள் 50 சத மானியத்திலும், நிலக்கடலை பயிருக்கான நுண்ணூட்டங்கள் மற்றும் இதர பயிர்களுக்கான நுண்ணூட்டங்கள் 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    இது தவிர கரும்பு, நெல் மற்றும் தென்னைக்கான நுண்ணூட்டங்களும் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. பயிர்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கும் இயற்கையான பயிர் பாதுகாப்பு மருந்துகளான சூடோமோனாஸ் மற்றும் விரிடி ஆகியவையும் 50 சத மானியத்தில் இருப்பில் உள்ளது.

    விவசாயிகளுக்கு உரச்செலவினை குறைத்து, மண்ணிலுள்ள சத்துக்களை பயிர்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படக்கூடிய உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் ஆகியன 50 சதவீதம் மானியத்திலும், பயிர்களுக்கு தெளிப்பான்கள் மூலம் எளிதாக தெளிக்கும் வடிவிலான திரவ அசோஸ்பைரில்லம் ஆகியனவும் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல், பாசிப்பயறு, உளுந்து, சோளம், சாமை, நிலக்கடலை மற்றும் எள் விதைகளும் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    மேற்கண்ட வேளாண் இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் வந்து இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    • விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினர்.
    • பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக விவசா யிகளுக்கு பவர் டில்லர் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் டி.மதியழகன், தளி டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

    குறைந்த அளவு பரப்பில் வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் சிறிய வகை வேளாண் இயந்திரங்களைக் கொண்டு உழவுப்பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பவர்டில்லர்கள், விசை களையெடுப்பான் உள்ளிட்ட கருவிகளை வழங்கும் பணிகள் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    அதன்படி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண் எந்திரமயமாக்கல் 2023-24 - திட்டத்தின் கீழ் 56 விவசாயிகளுக்கு பவர் டில்லர் வாங்க ரூ.42 லட்சத்து 74 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 50 சதவீதமும், பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாக ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறி யாளர்கள் ரவி, இந்துமதி, லட்சுமி ஐஸ்வர்யா, அனுசா பேகம், வேளாண் அலுவலர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×