என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nitish Kumar"
- ஆர்ஜேடி கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ், பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வரானார்
- 243 இடங்கள் உள்ள சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 இடங்கள் வேண்டும்
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்.
கடந்த ஜனவரி 28 அன்று அக்கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
இன்று நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பீகார் மாநில சட்டசபையில் 243 இடங்கள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.
முன்னதாக, சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து சவுத்ரி பதவி விலகி, துணை சபாநாயகர் மகேஸ்வர் அசாரி (Maheswar Hazari) புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினர். தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதிய சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.
#WATCH | Bihar CM Nitish Kumar's government wins Floor test after 129 MLAs support the resolution.
— ANI (@ANI) February 12, 2024
The opposition walked out from the State Assembly. pic.twitter.com/Xr84vYKsbz
- பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
- 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது
பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.
இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.
- லாலு கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் இணைந்தார் நிதிஷ் குமார்.
- பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்ற நிலையில், இன்று மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக இருந்தார்.
திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், பா.ஜனதாவுடன் இணைந்தார். இதனால் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் பா.ஜனதா ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனால் இன்று பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.
இதற்கிடையே பீகாரில் எம்.எல்.ஏ.-க்களை இழுக்க குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் அக்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று எம்.எல்.ஏ.-க்களுடன் தேஜஸ்வி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதற்கிடையே தேஜஸ்வி யாதவ் வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தேஜஸ்வி வீட்டிற்குள் நுழைந்து எம்.எல்.ஏ.-க்களிடம் விரும்பத்தாக நிகழ்வுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டுாம்" என ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் மெஜரிட்டியை நிரூபிக்க 123 பேர் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ் குமாருக்கு ஆதரவு
நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது.
- நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை.
பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சி நடத்தி வந்தார். துணை முதல்-மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் அமைந்திருந்த மெகா கூட்டணியை முறித்துக் கொண்டார். அங்கிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார்.
மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பீகார் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது. இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆளும் கட்சி வரிசையில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து பா.ஜனதா கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளது. அதுபோல நிதிஷ்குமாரும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்காணித்து வருகிறார். அவர்களும் தனி இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை. அவர்கள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் குதிரை பேரம் நடப்பதாக குற்றச் சாட்டுகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து ஓட்டெடுப்பின்போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும்.
நிதிஷ் குமார் தொடர்பான விசயங்களுக்க ஆதரவு அளிக்க வேண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்பட்டார் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் என கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐந்து பேரில் இருவரும் நாங்கள் பீகார் மாநிலத்திற்கு வெளியில் இருப்பதாகவும், ஒருவர் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் விளையாட்டை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் விளையாட்டை நாங்கள்தான் முடித்து வைப்போம்" என்றார். இதனால் அவர் நாளைய நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் நிஜன்ராம் மாஞ்சியை இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் நிதிஷ் குமாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா? என்பதில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் 4 எம்.எல்.ஏ.க்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று மாஞ்சி உறுதி அளித்துள்ளார். என்றாலும் பீகார் அரசியலில் கடைசி நிமிட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாளை காலை பீகார் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும்போது நிதிஷ்குமாருக்கு இருக்கும் பெரும்பான்மை பலம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.
- பா.ஜ.க. ஆதரவுடன் பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்.
- 9-வது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்ற அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் திடீரென விலகினார். அதன்பின், ஆளுநரைச் சந்தித்த நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பா.ஜ.க. ஆதரவுடன் பீகாரின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே, 9-வது முறையாக முதல் மந்திரியாக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக்கூறிய பிரதமர் அலுவலகம் மாநிலத்துக்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர் என தெரிவித்தது.
- இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார்.
- பா.ஜனதா ஆதரவுடன் பீகார் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்தியா கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.
இதனால் பீகார் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதா ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். வருகிற 12-ந்தேதி பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை நிதிஷ் குமார் சந்தித்து பேச இருக்கிறார். பீகார் துணை முதல்வர்கள் சம்ராத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியை தவிர்த்து உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார்- மோடி (கோப்புப்படம்)
பீகார் மாநிலத்தில் ஆறு மாநிலங்களவை இடத்திற்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை தலா இரண்டு எம்.பி.க்களை கொண்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜதான தலா ஒரு எம்.பி.க்களை கொண்டுள்ளது.
இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜனதா கூட்டணிக்கு திரும்பிய பின், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.
- கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன்.
- கூட்டணிக்காக மிகவும் முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை என்றார் நிதிஷ்குமார்.
பீகார்:
பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதை முடித்து விட்டார்கள்.
கூட்டணிக்காக நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஒன்று கூட செய்யவில்லை.
எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை இன்று வரை முடிவு செய்யவில்லை. இதனாலேயே நான் அவர்களை விட்டுவிட்டு முதலில் யாருடன் இருந்தேனோ அவர்களுடன் திரும்பி விட்டேன். நான் பீகார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா?
9 கட்சிகள் முன்னிலையில் நடத்தினேன். 2019-2020ல் சட்டசபை முதல் பொதுக்கூட்டம் வரை எல்லா இடங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி பேசினேன் என தெரிவித்தார்.
- பீகாரின் புர்னியா பகுதியில் நடந்த இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுல் காந்தி பேசினார்.
- அப்போது, மகாகத்பந்தன் கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என்றார்.
பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ்குமார் முதல்மந்திரியாகவும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரியாகவும் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டார். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநில கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டதால் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார். இதனால் மகாகத்பந்தன் கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பா.ஜ.க. ஆதரவளித்த நிலையில், பா.ஜ.க. ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் பீகாரின் முதல் மந்திரியாக 9-வது முறை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் இல்லாமல் மகாகத்பந்தன் கூட்டணி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
பீகாரின் புர்னியா பகுதியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது ராகுல் காந்தி பேசியதாவது:
பீகார் மாநிலத்தில் சமூக நீதிக்காக மகாகத்பந்தன் கூட்டணி தொடர்ந்து போராடும். எங்களுக்கு நிதிஷ் குமார் தேவையில்லை.
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாட்டின் அனைத்து துறைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
தலித்துகள், ஓ.பி.சி. மற்றும் பிற பிரிவினரின் சரியான மக்கள் தொகையைக் கண்டறிய நம் நாட்டில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை.
மணிப்பூரில் உள்நாட்டுப் போருக்கான சூழல் நிலவி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இன்னும் அங்கு செல்லவில்லை என தெரிவித்தார்.
- பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார் நிதிஷ் குமார்.
- பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாட்னாவுக்கு அழைத்தது நிதிஷ் குமார் எனக் கூறிய சரத் பவார்.
பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.
தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.
இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து, முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், நேற்று மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறியதாவது, "பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாட்னாவுக்கு அழைத்தது நிதிஷ் குமார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவரது செயலும் பாஜக-வுக்கு எதிராகதான் இருந்தது. ஆனால் கடந்த 10-15 நாட்களில் தனது சித்தாந்தத்தை விட்டு வெளியேறி, தற்போது பா.ஜ.க-வில் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். மக்கள் நிச்சயம் அவருக்கு பாடம் புகட்டுவார்" எனத் தெரிவித்தார்.
- தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.
- அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது.
திருப்பூா்:
சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா் என்று மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்லடத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தா்ப்பவாத அரசியலின் பேராபாயத்தை உற்று நோக்கி அதனைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
பீகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாா் கடந்த காலங்களில் கூட்டணி, அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதும், நிா்வாகிகளின் முடிவுக்கு ஏற்ப கூட்டணி நிலைபாடுகளை மாற்றிக் கொள்வதும் தவிா்க்க முடியாதது. ஆனால் நிதிஷ்குமாா் பச்சை சந்தா்ப்பவாதத்தின் அடையாளமாக அரசியலில் காணப்படுகிறாா்.
18 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் இருந்தவா் முதல்வா் பதவிக்கு ஆபத்து என்றவுடன், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஏற்படுத்தி புதிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறினார்.
இதன் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற களத்தை அமைத்தாா். கடந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. முதல்வா் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்வா் பதவியை ஏற்று புதிய பாதையை த்தொடங்கியுள்ளாா். இத்தகைய அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
திருச்சி மத்திய சிறைச்சாலையை வரும் பிப்ரவரி 10- ந்தேதி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சி முற்றுகையிட உள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து சமூக வழக்குகள் தொடா்பாக வாடிவதங்கிக் கொண்டிருக்கும் 36 கைதிகள் உள்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 2024 பாராளுமன்ற தேர்தல்தான் கடைசி தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் ராயல் ராஜா, மாநில செயலாளா்கள் ஷபி, ஜாபா் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
- பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார்.
- பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
பீகாரில் பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பியது பாஜகவிற்கு மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஜேடியு மற்றும் நிதிஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே. இந்தியா கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி. அவர்களின் எண்ணம் பலிக்காது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி. பீகாரில் என்.டி.ஏ ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி சாதனை படைக்கும். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி 2025ல் மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனக் கூறினார்.
- பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
- பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.
தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.
இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.
இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.
அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.
பாட்னாவில் நடைபெற்ற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்