என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரதமர் மோடியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று சந்திப்பு
- இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார்.
- பா.ஜனதா ஆதரவுடன் பீகார் மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தார். இந்தியா கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.
இதனால் பீகார் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதா ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். வருகிற 12-ந்தேதி பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை நிதிஷ் குமார் சந்தித்து பேச இருக்கிறார். பீகார் துணை முதல்வர்கள் சம்ராத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியை தவிர்த்து உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார்- மோடி (கோப்புப்படம்)
பீகார் மாநிலத்தில் ஆறு மாநிலங்களவை இடத்திற்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை தலா இரண்டு எம்.பி.க்களை கொண்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜதான தலா ஒரு எம்.பி.க்களை கொண்டுள்ளது.
இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜனதா கூட்டணிக்கு திரும்பிய பின், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்