என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "motorcycle accident"
மாதவரம்:
மணலி புதுநகரில் இந்தியன் வங்கியில் காசாளராக பணி புரிந்து வருபவர் மகேந்திரன். நேற்று இரவு 7 மணியளவில் தனது மனைவி ஜெகதீஸ்வரி, மகள் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கொரட்டூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தார்.
மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரி வண்டியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஸ்வரி உயிரிழந்தார். அவரது உடலை கண்டு கணவரும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 65). இவரது நண்பர் மொக்கையன் (55). இருவரும் நேற்று திருப்பூர் சந்தைபேட்டைக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு மேல் பூம்புகார் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
திருப்பூர்- பல்லடம் சாலையில் சென்றபோது முன்னால் லாரி சென்றது. லாரியை பின் தொடர்ந்தே சவுந்திரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஒரு இடத்தில் லாரி திடீரென வேகம் குறைந்தது. இதனை எதிர்பார்க்காத சவுந்திரபாண்டியன் லாரியின் பின்பக்கம் மோதினார்.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். லாரி சக்கரம் இருவரது உடல்கள் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சவுந்திரபாண்டியனும், அவரது நண்பர் மொக்கையனும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கநாதன் (33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி செண்பகம் (19). கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சீராம்பாளையத்தில் வந்தபோது சாலையில் இருந்த சிறிய கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.
இதனால் நிலைதடுமாறியது. மோட்டார் சைக்கிளை நாகராஜ் திருப்பியபோது அங்கு ஏற்கனவே வெட்டிப்போட்டிருந்த மரத்தின்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். நாகராஜின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.
இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வத்தலக்குண்டு காந்திநகர் ராஜாஜி தெருவை சேந்தவர் சன்னாசி. இவர் தி.மு.க. பிரமுகர். இவரது மகன் வாசிமலை (வயது31). வெங்கிடாஸ்திரி கோட்டையில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருணம் ஆகி நிவேதா (23) என்ற மனைவியும் வருண் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று இரவு ஓட்டல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். ஆ பிரிவு என்ற இடத்தில் வந்தபோது எதிரே எம்.குரும்பபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வாசிமலை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். ராமமூர்த்தி மற்றும் முருகன் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் அங்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவோணம்:
திருவோணம் அருகே கறம்பக்குடியில் செயல்படும் ஒரு ஓட்டலில் வடமாநில்ததை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் செவ்வாய்பட்டிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற தென்னை மரம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் திருவோணம் சப்- இன்ஸ் பெக்டர் மேகநாதன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்.
பலியான வாலிபரின் பெயர் விவரம் உடனடியாக தெரிய வில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் கீழப்பிடாகையை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜ்குமார் (வயது 25) விவசாயி. நேற்று ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் பள்ளம் செம்பிய வேலூர் பகுதியை சேர்ந்த வேதையன் மகன் செந்தாமரை கண்ணன் (வயது 31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரையும், செந்தாமரை கண்ணனையும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் செந்தாமரை கண்ணனை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்