search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride groom died"

    தாராபுரத்தில் சாலையில் வெட்டிப்போட்ட மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி மனைவி கதறல்

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி செண்பகம் (19). கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

    சம்பவத்தன்று இரவு நாகராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சீராம்பாளையத்தில் வந்தபோது சாலையில் இருந்த சிறிய கல் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    இதனால் நிலைதடுமாறியது. மோட்டார் சைக்கிளை நாகராஜ் திருப்பியபோது அங்கு ஏற்கனவே வெட்டிப்போட்டிருந்த மரத்தின்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். நாகராஜின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

    இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த திருமலை அகரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பெரியசாமிக்கும், கொள்ளத்தங்குறிச்சி பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டின் பெற்றோர்களும் முடிவு செய்தனர். அதற்காக பெரியசாமி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெரியசாமிக்கும், விஜயகுமாரிக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் நந்திமங்கலம் சென்றிருந்தார்.

    அங்கிருந்து பெரியசாமி சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இரவு 9.50 மணியளவில் அவரது மோட்டார் சைக்கிள் திருமலையகரம் அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் நோக்கி சென்ற அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பெரியசாமி தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச் சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே பெரியசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    தோவாளையில் மோட்டார் சைக்கிள் பாலத்தில் மோதி 4 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரல்வாய்மொழி:

    ராஜாக்கமங்கலம் அருகே பழவிளை பூவன்குழியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் மணிபாரதி, (வயது 23). இவர், அந்த பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடக்கிறது. நேற்று காலை வேலைக்கு சென்ற மணிபாரதி இரவு தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கும் தர்மபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குமாரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை மணிபாரதி ஓட்டினார். பிரபாகரன் பின்னால் அமர்ந்திருந்தார். தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மணிபாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கரை பகுதியில் 4 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

    இதில், மணிபாரதியின் தலை பாலத்தில் பலமாக இடித்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரபாகரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த மணிபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிபாரதி பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணவாளக்குறிச்சி படர்நிலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், (வயது 55). இவர் தனது மோட்டார் சைக்கிளை மணவாளக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றின் கதவை டிரைவர் ரமேஷ் திறந்தார்.

    எதிர்பாராத விதமாக சந்திரசேகர் அந்த வேன் கதவின் மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று சந்திரசேகர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ஆட்டோ டிரைவர் செல்வக்குமார் நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதலில் புதுமாப்பிள்ளை பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே சந்தைபுதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ் என்ற ராஜசேகர் (வயது32). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்த இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதால் புதுவையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

    நேற்று இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான தனவேலு (34) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் லிங்காரெட்டிபாளையத்துக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை ராஜ் ஓட்டிவந்தார். தனவேலு பின்னால் அமர்ந்து வந்தார்.

    சந்தைக்புதுக்குப்பம் அருகே கைலாசபுரம் என்ற இடத்தில் வந்த போது எதிரே சந்தைக்புதுக்குப்ப முதுநகரை சேர்ந்த சதீஷ் (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ், தனவேலு, சதீஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக 3 பேரும் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தனவேலு, சதீஷ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்தில் பலியான ராஜிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மாலதி (24) என்ற மனைவி உள்ளார். தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமான 6 மாதத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சந்தை புதுக்குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×