search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
    X

    கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

    மணலி புதுநகரில் கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாதவரம்:

    மணலி புதுநகரில் இந்தியன் வங்கியில் காசாளராக பணி புரிந்து வருபவர் மகேந்திரன். நேற்று இரவு 7 மணியளவில் தனது மனைவி ஜெகதீஸ்வரி, மகள் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கொரட்டூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தார்.

    மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரி வண்டியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஸ்வரி உயிரிழந்தார். அவரது உடலை கண்டு கணவரும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×