என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்26 April 2019 9:58 AM GMT (Updated: 26 April 2019 9:58 AM GMT)
மணலி புதுநகரில் கணவருடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாதவரம்:
மணலி புதுநகரில் இந்தியன் வங்கியில் காசாளராக பணி புரிந்து வருபவர் மகேந்திரன். நேற்று இரவு 7 மணியளவில் தனது மனைவி ஜெகதீஸ்வரி, மகள் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் கொரட்டூரில் நடந்த திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தார்.
மாதவரம் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரி வண்டியிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஸ்வரி உயிரிழந்தார். அவரது உடலை கண்டு கணவரும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X