என் மலர்
நீங்கள் தேடியது "youth falling"
ஈரோடு:
காங்கயம் அருகே உள்ள வீராணம்பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 25) பட்டதாரி. இவரது நண்பர் செந்தில்குமார்(26) இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களது 2 பேரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் காங்கயத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நல்லிபாளையம் பிரிவில் வந்த போது நிலைத்தடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். சுபாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு அடுத்த மாவிழிபாளையம் ரெயில்வே பாலம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் மேற்கு வங்காளத்தை சோமைஹேம்பரம் (வயது 27) என்பதும் திருப்பூரில் இருந்து ஹவுரா ரெயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சோமைஹேம்பரம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.






