என் மலர்
செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
தருமபுரியில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்துள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போத்ராஜ். இவரது மகன் ஆனந்தபாபு (வயது24) பி.இ. பட்டதாரியான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நடுப்பட்டியில் இருந்து தர்மபுரிக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது தொப்பூர் டோல்கேட் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி ஆனந்தபாபு சாலையில் தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே படுகாயம் அடைந்த ஆனந்தபாபுவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






