search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி
    X

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாம்பவர் வடகரை:

    சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் இசக்கி. இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் லெட்சுமணன் (வயது 18). இவர் தென்காசியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தந்தை, தாய் ஆகியோர் கேரளாவில் வசித்துவருவதால் லெட்சுமணன் அப்பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். 

    இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லெட்மணன் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மெயின் ரோட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×