என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி
Byமாலை மலர்8 May 2019 2:30 PM GMT (Updated: 8 May 2019 2:30 PM GMT)
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாம்பவர் வடகரை:
சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் இசக்கி. இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் லெட்சுமணன் (வயது 18). இவர் தென்காசியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தந்தை, தாய் ஆகியோர் கேரளாவில் வசித்துவருவதால் லெட்சுமணன் அப்பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லெட்மணன் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மெயின் ரோட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X